வெள்ளி, 13 செப்டம்பர், 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு- . 10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு-..தமிழக அரசு அறிவிப்பு!

tamilnadu 5th and 8th std board exam tn govt announced nakkheeran.in - santhoshb : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. மாணவர்களின் தேர்வு முடிவுகளை கொண்டு தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்.
மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு. ஏற்கனவே மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும், இதனை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
10- ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு- தமிழக அரசு அறிவிப்பு! தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பமொழி பாடம், ஆங்கில மொழி தேர்வுகள், முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறையை மாற்றி தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே இனி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: