
இந்நிலையில்
நேற்று காலை குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் பதுங்கி
இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு இன்ஸ்பெக்டர்
சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அங்கு சென்றனர்.
போலீசாரை கண்டதும் கதிர்வேல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.
போலீசார்
தடுக்க முயன்றதால் கதிர்வேல் ஒரு கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டர்
சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோரை வெட்டினார். இதனால்
இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி துப்பாக்கியால் தற்காப்புக்காக கதிர்வேலை நோக்கி
சுட்டார். இதில் கதிர்வேலின் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அவர் ரத்த
வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
உடனடியாக
காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் சேலம்
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கதிர்வேலின் உடல் பிரேத
பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக