புதன், 1 மே, 2019

ஸ்டாலினுக்குக் குறியா?' - சபாநாயகர் பதவிக்கு தி.மு.க செக்... மும்மூர்த்திகள் அதிரடி!

சபாநாயகர் vikatan.com - syed-abuthahir: ``ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். அவருடைய முதல் குறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வதுதான்'' எனக் கடந்த பத்து நாள்களுக்கு முன்பே நாம் குறிப்பிட்டோம். அதற்கான ஆரம்பகட்ட வேலையை இப்போது எடப்பாடி தரப்பு கையில் எடுத்துவிட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவருக்குச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் மூவரும் கிடைக்கப்பெற்றதும் மூவர் தரும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கப்போகின்றன.

இந்த நோட்டீஸ் குறித்த சபாநாயகருக்கு நெருக்கமானவர்கள் ``தேர்தலுக்கு முன்பிலிருந்தே கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரும் தினகரன் அணிக்குச் சென்றுவிட்டாலும், அதை வைத்துமட்டும் தகுதி நீக்கம் செய்துவிடமுடியாது. ஆனால், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.கவிற்கு எதிராகவும் தினகரன் அணிக்கு ஆதரவாகவும் அவர்கள் பிரசாரம் செய்த ஆதரங்கள் வந்த பிறகு அதை வைத்து இந்தத் தகுதி நீக்கத்தைக் கையில் எடுத்துள்ளார் சபாநாயகர்” என்கிறார்கள். ஆனால், தினகரன் தரப்போ இந்தத் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்பார்த்து ஏற்கெனவே காத்திருந்துள்ளனர். இந்த நோட்டீஸ் வந்தால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்கிற ஆலோசனை தினகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தினகரன் தரப்பு அளிக்கப் போகும் நோட்டீஸ் சபாநாயகருக்கு செக்காக அமைந்துவிடும் என்கிறார்கள்.19-4-19 அன்றுதான் தினகரனின் அ.ம.மு.க அணியைக் கட்சியாகப் பதிவு செய்தார். அதற்கு முன்பு வரை அந்த அணி அ.தி.மு.க வின் ஓர் அணியாகவே செயல்பட்டது. அ.தி.மு.க வின் ஓர் அணிக்கு ஆதரவாகவே இந்த மூவரும் செயல்பட்டார்களே ஒழிய, தினகரன் ஆரம்பித்த கட்சியில் இவர்கள் உறுப்பினராகவோ, பொறுப்போ பெறவில்லை. எனவே, ஓர் அணிக்கு ஆதரவாக இருந்ததை வைத்து தகுதி நீக்கம் செய்யமுடியாது” என்று பதிலளிக்க முடிவு செய்துள்ளார்கள்.
தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு செக் வைக்க சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம் குறித்த வழக்கு கோர்டில் உள்ளது. அந்த வழக்கை வேகப்படுத்தி தி.மு.கவிற்கு செக் வைக்க எடப்பாடி நினைக்கிறார். ஒருபுறம் தினகரன் தரப்பு செக், மறுபுறம் தி.மு.க வும் நெருக்கடி என எடப்பாடி எட்டடிபாய நினைக்கிறார். குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் பெயரும் பட்டியலில் உள்ளது. இதனால், ஸ்டாலின் ஆட்டம்காணுவார் என எடப்பாடி திட்டமிடுகிறார்.
இந்த விவரம் ஸ்டாலினுக்கு தெரிந்தே, சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் என்று சொல்லியிருந்தார். மூவருக்கு நோட்டீஸ் வழங்கிய உடனே  தி.மு.க தரப்பு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி மனு ஒன்றை சட்டசபை செயலாளரிடம் அளித்துள்ளது. இதனால், சபாநாயகரின் அதிகாரத்தை இரண்டு மாதங்களுக்கு முடக்கிவைக்கத் திட்டமிடுகிறார்கள். இந்த இருவரின் அதிரடியை சபாநாயகரும், எடப்பாடியும் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதே கேள்வியாக உள்ளது

கருத்துகள் இல்லை: