செவ்வாய், 30 ஏப்ரல், 2019

புதுப்பானையில் பழைய கல்லு:சிபிஐ விசாரணை அம்பலம்

pollachi nakkheeran.in - prakash : பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த வழக்கு முதலில் பொள்ளாச்சி போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் விசாரணையில் ஈடுப்பட்ட பொள்ளாச்சி போலீசாரும் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் பாதிக்கப்பட்ட பெண்களை பார்க்கவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக வீடியோக்கள் வெளியானது. அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெண்கள் யார் என்றும் பார்க்கவில்லை.< தற்பொழுது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆரிலும் ஏற்கனவே சிபிசிஐடி மற்றும் பொள்ளாச்சி போலீசார் கொடுத்த எப்.ஐ.ஆரில் உள்ளதுபோல் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரும், பாதிக்கப்பட்ட பெண்ணின்  அண்ணனை தாக்கியது தொடர்பான புகாருமே இடம்பெற்றுள்ளது. புதியதாக எதுவும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை: