புதன், 2 ஜனவரி, 2019

சபரிமலை சன்னிதானத்தில் 2 பெண்கள் வழிபாடு

சபரிமலை, பெண்கள், சாமிதரிசனம்
தினமலர் :சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல,அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருபப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள், இன்று(ஜன.,2) அதிகாலை 3.45 மணியளவில் 18 ம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். அவர்களின் விவரம் பந்து மற்றும் கனதுர்கா எனவும், இரண்டு பேருக்கும் வயது 40 ஆவதும் தெரியவந்துள்ளது.

இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, இரண்டு பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: