
மேலும் கடந்த ஏப்ரல்
10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தடையை மீறி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் கருணாஸ் கைது
செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல்
செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, இந்த
வழக்கிலும் கருணாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்த
வழக்கிற்காக கருணாஸ் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் 30 நாட்களுக்கு
தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி
நிபந்தனை விதித்தார்.இரு வழக்குகளிலும், கருணாசுக்கு ஜாமீன்
கிடைத்ததையடுத்து, இன்று காலை வேலூர் சிறையில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட பிறகு
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ், என் மீதான வழக்கில் உண்மை
வென்றது, நீதி வென்றது. இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை
எதிர்கொள்வேன்” என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக