சனி, 29 செப்டம்பர், 2018

சபரிமலையில் 1986 இல் படஷூட்டிங் நடந்தது ..1972 வரை பெண்களுக்கு அங்கு சட்டப்படி உரிமை இருந்தது

LR Jagadheesan : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை
அனுமதிக்கக்கூடாது என்கிற ஆண்களின் கோரிக்கையை ஏற்று பெண்களை தடை செய்யும் சட்டம் முதன்முதலில் 1972 ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டது என்கிறார்கள்.
1969 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 1977ஆண்டு மார்ச் 25 வரை எட்டு ஆண்டுகள் கேரளத்தை ஆண்டது கம்யூனிஸ்ட் கட்சி.
அப்படியானால் சபரிமலையின் மகரஜோதியை அரசு செலவில் ஏற்றி உலகத்தை ஏமாற்றியதைப்போல சபரிமலையை ஆண்களின் ஏகபோகமாக்கியதும் கேரளத்தின் மார்க்சியம் உயிர்மூச்சாய் கொண்ட இடதுசாரி அரசாங்கம் தானா? எண்டே பகவதி! — அப்போ என்னதான் நடந்தது?
சிகப்பு வெளுத்தால் செங்காவி என்பது வெறும் சொலவடையல்ல அவர்களின் சரித்திரமே அது தானா????

கருத்துகள் இல்லை: