

மேலும் மறுதேர்தல் நடத்த வேண்டும். ஓட்டு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும் என இடதுசாரிமாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதே போல் காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி கட்சி மாணவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. ஆனால் டெல்லி பல்கலைக்கழகம் தேர்தல் அதிகாரிகள் மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இந்த செய்தி தில்லி பத்திரிகைகளில் வந்தவுடன். அதிர்ச்சியடைந்த இந்திய தேர்தல்ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்போது தில்லி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது என்ற துறை ரீதியான உள் விசாரணையில் ஈடுபட்டது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது..
இதையடுத்து மேலும் அதிர்ச்சியடைந்த இந்திய தேர்தல் ஆணையம், ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம்தான் வழங்கியது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற வாக்குப் பதிவு இயந்திரங்களே இல்லை. இந்த இயந்திரங்களை டெல்லி பல்கலைக்கழகம் தனியாக வாடகைக்கு வாங்கி உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் மூத்த அதிகாரிகள் தற்போது யாரும் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் வாக்குஇயந்திரத்தின் மூலம் ஏபிவிபி தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் யாரின் உத்தரவின் பேரில் யாரிடம் வாக்கு இயந்திரம் பெறப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை மாணவர்கள் எழுப்பி வருகின்றனர்.பிஜேபி செய்த மோசடித்தனம் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
DINASUVADU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக