புதன், 30 மே, 2018

ட்ரெண்டாகிய " நான்தாப்பா ரஜினிகாந்த்" தூத்துக்குடியில் கிடைத்த சாத்துப்படி!

மாலைமலர் :ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து
ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணம் - இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #நான்தான்பாரஜினிகாந்த்
பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
ஆறுதல் கூறிய நிலையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கும் ஒரு முயற்சியாக இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்திடம், “யார் நீங்கள்?” என்று கேட்டார்.
சென்னை:  அதற்கு சிரித்துக்கொண்டே, “நான் ரஜினி” என அவர் பதிலளிக்க, “எங்கிருந்து வந்தீங்க?” என அந்த இளைஞர் கேட்க, “சென்னையிலிருந்து” என ரஜினி கூறினார். “சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா” என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.



100 நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கருத்துகள் இல்லை: