
இந்நிலையில்,
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பெங்களூரில் குமாரசாமி
நிருபர்களுக்கு இன்றுபேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகளின்
பயிர்கடனை உறுதியாக இந்த அரசு தள்ளுபடி செய்யும். அதற்கு 15-நாட்கள்வரை
பொறுமை காக்க வேண்டும். பயிர்கடன் தள்ளுபடி குறித்து அடுத்த 15 நாட்களில்
நல்ல முடிவு எடுப்போம், முழுமையான அறிவிப்பை வெளியிடுவோம். எந்தவிதமான
சிக்கல் இருந்தாலும், நிதிக்கட்டுப்பாட்டை பராமரிப்பதிலும்,
விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வதிலும் எங்கள் அரசு தீர்மானமாக
இருக்கிறது.
விவசாயிகளுடன் கடந்த 3 மணிநேரம்
ஆலோசனை நடத்தியபின்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். விரைவில் காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தியை நானும், துணை முதல்வர் பரமேஸ்வராவும் சந்தித்து
விவசாயக் கடன்தள்ளுபடி குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். ஒட்டுமொத்தமாகக்
கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகை எனக்குக் கிடைத்திருக்கிறது. எத்தனை
ஆயிரம் கோடிகளாக இருந்தாலும், விவசாயிகளைக் காப்பது எங்களின் கடமையாகும்.
இன்னும் 15 நாட்களில் பயிர்கடன்தள்ளுபடி உறுதியாக இருக்கும். இதிலிருந்து
நான் பின்வாங்கமாட்டேன்” இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக