
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலம் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. >இவற்றுடன் உத்தரபிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கார் மற்றும் பந்தாரா - கோந்தியா மற்றும் நாகலாந்து ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அவற்றில் பல்கார் தொகுதியில் பாஜகவும், நாகலாந்து தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. மற்ற இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது.
2014இல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மக்களவை இடைத் தேர்தல்களில் இதுவரை ஒன்றில்கூட வெற்றிபெறாமல், தொடர்ந்து மக்களவையில் தனது பலத்தை இழந்து வந்த பாஜக முதல் முறையாக ஒரு மக்களவை இடைத்தேர்தலில் வென்றிருப்பதும் இம்முறைதான்.
எனினும், தேர்தல் நடந்த மொத்தமுள்ள 15 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நேரடியாக வெறும் இரண்டில் மட்டுமே வென்றுள்ள பாஜக நிச்சயமாக தற்போது கொண்டாடும் நிலையில் இல்லை.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த ஊடகவியலாளர் மணி, "எதிர்க்கட்சிகளாக உள்ள தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியும்," என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகக் கூறுகிறார்.
"தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ள அக்கட்சித் தலைவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, அவர்கள் மீது சிறிய வழக்கு இருந்தாலும் அவற்றை வைத்து அவர்களை அச்சுறுத்தி, அவர்களை ஒன்று சேர விடாமல் செய்வதே பாஜகவின் அடுத்த நகர்வாக இருக்கும்," என்று கணிக்கிறார் மணி.
"இந்த இடைத் தேர்தலின் முடிவுகள் 2019இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய வெவ்வேறு விவகாரங்களில் அடிப்படையில் எதிர்கொள்ளப்படுபவை," என்கிறார் அவர்.
மூன்றாவது அணி குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஒரு அணியால் பாஜக அல்லாத அரசை அமைக்க முடியாது," என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக