
அப்போது, கார்த்தியிடம் விசாரணை நடத்த கால அவகாசம் போதவில்லை என கூறிய சி.பி.ஐ தரப்பு, மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால், இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இது அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தார். மார்ச் 6-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், தினமும் மாலையில் ஒரு மணிநேரம் வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி அளித்தார். மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள தடை எதுவும் இல்லை. ஆனால், வீட்டு உணவுகளை அனுமதிக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை அதிகாரிகள் வாகனத்தில் அழைத்துச் சென்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக