ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

கமலஹாசன் :சாதி மத விளையாட்டிற்குள் நானில்லை.... ஆணவ கொலைகளை கண்டுகொள்ள மாட்டார் ?

Adv Manoj Liyonzon : சாதி மத விளையாட்டிற்குள் நானில்லை
-மநீம கமல்ஹாசன்-
புகார் ஆனதன் ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட கணக்கின்படி மட்டும் தமிழகத்தில் இதுவரை 3000 மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளது, மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது
மத ரீதியாக நிகழ்த்தப்பட்ட ரான்ச்சி-ஹதியா கலவரம், 1969 1985 2002 2006 குஜராத் கலவரங்கள், 1974 1992 மும்பை கலவரங்கள், மொரதாபாத் கலவரம், நெல்லி கலவரம், பிவாண்டி கலவரம், மீரட் கலவரம், பாகல்பூர் கலவரம், ஹைதராபாத் கலவரம், பெங்களூரு கலவரம், மேற்கு வங்காள கலவரம் முசாஃபர் கலவரம் ஆகிய சம்பவங்களில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டது, மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது
சாதியும் மதமும் பாகுபாட்டை வலியுறுத்துகிறது. இந்த பாகுபாடு மனிதர்களை கொத்து கொத்தாக கொல்கின்றது. சமூகத்தை பாழ்படுத்துகிறது. எதையும் விட இந்த சாதியும் மதமுமே பேராபத்தானது, கொடியது.
பேராபத்தும் மிகக் கொடியதுமான சாதியும் மதமும், மநீம கமல்ஹாசனுக்கு விளையாட்டாக தெரிகிறது என்றால்….

கருத்துகள் இல்லை: