
உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் “இரு நீதியரசர் இருக்கை” அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், தமிழகத்தில் பல்வேறு வகையிலான குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன என்பதை இச்சூழலில் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், மறைந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் காலமானதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது, அவர் குற்றமற்றவரென்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, சனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும்” என தெரிவித்துள்ளார்.thetimestamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக