வியாழன், 16 பிப்ரவரி, 2017

‘ப்ரோத்தியடன் மாத்திரையும் டாக்டர் சிவகுமாரும் ? ஜெ.,விற்கு பல வருடங்கள் அதிக டோஸ் மாத்திரை?

‘ப்ரோத்தியடன்’ என்கிற மாத்திரை பற்றி அறிவீர்களா நண்பர்களே? இல்லை என்றால் newstig சொல்லப் போகும் பயங்கர தகவலை படித்து விட்டு உங்களுக்கு தெரிந்த மனநல மருத்துவரை அணுகி கேளுங்கள். துடித்துப் போய் விடுவீர்கள். ஜெ., இறந்து ஒருவாரம் கழித்து, அந்த புலனாய்வு வார இதழ் ஜெ.,வின் மருத்துவ அறிக்கை,மருத்துவ விவரங்கள் குறித்து தெளிவான குறுந்தொடர் ஒன்றை வெளியிட்டது.
அந்த தொடரில் இந்த தூக்க மாத்திரையின் பெயரும் வெளியானது. அப்போதே  மனநல மருத்துவர்களை அணுகி விவரம் கேட்டது.
அந்த சூழ்நிலையில் தெளிவான கட்டுரை வெளியிட இயலவில்லை. ஆனால் இப்போது அவசியம் உருவாகியுள்ளது. காரணம் சசிகலாவின் இன்னொரு கோர முகம் இரண்டு மூன்று நாட்களாக மீடியா முன் வெளிப்படுகிறது.
அந்த கோர முகம் ஜெ., உயிரோடு இருந்த போது என்னெல்லாம் செய்திருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.
அந்த ‘ப்ரோதியடன்’ என்கிற மாத்திரை வெளியில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கிடைக்கவே கிடைக்காது.
காரணம் கடுமையான மன அழுத்தம் இருந்தால் மட்டுமே சிறிய அளவு டோஸ் கொடுப்பது மனநல மருத்துவர்களின் வழக்கம்.
அதையும் கூட நோயாளிகளின் நிலைமை சீரான உடனேயே மாத்திரையை நிறுத்திவிடுவார்கள்.

ஆனால், ஜெ.,விற்கு பல வருடங்கள் அதிக அளவு டோஸ் மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. நிலைதவறி தூங்கவைத்து விடும் தன்மை கொண்டது இந்த மாத்திரை.
தவிர நீண்ட வருடங்கள் இந்த மாத்திரை எடுத்துக் கொண்டால் என்ன பேசுகிறோம், யாரைப் பேசுகிறோம் என்கிற குழப்பம் வந்து விடும், கோபம் அதிக அளவில் வரும்.
நினைத்த நேரத்தில் எழுந்துவிட இயலாது. மறதி அதிகமாகும் இப்படி பகீர் கிளப்புகிறார்கள் மருத்துவர்கள்.
இந்த மாத்திரையை ஜெ.,விற்கு பரிந்துரைத்தது யார்..? சசியின் உறவினர் சிவக்குமார் தான் ஜெ.,வின் பர்சனல் டாக்டர். கூடவே இருப்பார் அந்த சிவக்குமார்.
ஆனால், ஜெ., அப்போல்லோ கொண்டு சென்றதில் இருந்து டாக்டர் சிவகுமார் தென்படவே இல்லை.
அவர் எங்கு இருக்கிறார்? எந்த நாட்டில் இருக்கிறார்? ஏன் தலைமறைவானார்..? கடவுளே.!
தனி ஒரு மனுஷியாக அனாதையாக மகாராணி போல வாழ்ந்த ஜெயலலிதா என்னெல்லாம் துன்பம் அனுபவித்தாரோ…!?
நன்றி : நக்கீரன்

கருத்துகள் இல்லை: