
காலண்டர்கள் மற்றும் டைரிகளில் காந்தியின் படம் நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில்

காலண்டர்களில் மோடியின் படத்தைக் கண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காந்தியின் படம் முற்றிலும் நீக்கப்பட்டு, முழுவதுமாகவே மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். மேலும், காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு புறக்கணித்து வருவது கவலை
அளிக்கிறது என்றும் அவர் கூறினார். tamiloneindia
2 கருத்துகள்:
ரூபாய் நோட்டுகளிலும் -- காந்தி போய் மோடி வந்தாலும் ஆச்சிரியமில்லை ... அப்படித்தானே .... ?
ரூபாய் நோட்டுகளிலும் -- காந்தி போய் மோடி வந்தாலும் ஆச்சிரியமில்லை ... அப்படித்தானே .... ?
கருத்துரையிடுக