சனி, 5 மார்ச், 2016

நடிகர் சரத்குமார்: அதிமுகவின் அவலங்களை முன்வைத்து பிரசாரம் செய்வோம்.

அதிமுக அரசின் அவலங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக சரத்குமார் நேர்காணல் நடத்தி வருகிறார்.
இன்று நேர்காணலுக்கு இடையே நிருபர்களிடம் கூறுகையில், ''சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுக்க உள்ளேன். இவர் பிரசாரம் செய்வோம் என்பதிலும் பார்க்க அரசியலில் .------------ செய்வோம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்
அதிமுக அரசின் அவலங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று தேவை என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சமகவின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் எங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார் tamil.hindu.com

கருத்துகள் இல்லை: