சனி, 5 மார்ச், 2016

கூட்டணி பேரமா? - கொதிக்கும் கேப்டன் கட்சி! டேய் இது உலக மகா நடிப்புடா சாமி யோவ்


vikatan.com :தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த நொடி வரையிலும் கேப்டன் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்று விஜயகாந்த்தின் தேமுதிக கொதித்தெழுந்து நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக கொள்கை பரபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக மக்கள் அனைவரும் கேப்டனும், எங்களுடைய தேமுதிக கட்சியும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்கின்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். கேப்டன் தன்னுடைய முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒரு சிலரால் திட்டமிட்டு பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிடுகின்றன.நாமளும்தான் எவ்வளவு கஷ்டப்படுரோம்ல ..புதிசு  புதிசா  ஏலம்  எகிறி கிட்டு  போறது... பாத்து எண்ணி வாங்க வேண்டாமா? அதுக்குள்ளார கூட்டணி முடிவை ஒப்பான சொல்லவா முடியும்?  


அந்த வதந்திகளுடன் ஒரு கட்சியுடன் 59 தொகுதிகள் பேசி முடிந்துவிட்டதாகவும், மற்றொரு கட்சியுடன் ரகசியமாக பேசிக் கொண்டு இருப்பதாகவும், பல கோடி ரூபாய் கைமாறி விட்டதாகவும், பேரத்தை அதிகரிக்கவே கேப்டன் அமைதியாக இருக்கிறார் என்றும், கற்பனைக்கே எட்டாத வகையில், பல மாதிரி வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால், இந்த நொடி வரையிலும் கேப்டன் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்பதுதான் உண்மை. 

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த முடிவானாலும் கேப்டன் அறிவிப்பது மட்டுமே தேமுதிகவின் உண்மையான நிலைப்பாடாக இருக்கும். தேமுதிக என்ற கட்சியை 2005ல் ஆரம்பித்து இத்தனை ஆண்டு காலம், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இந்த அளவிற்கு கட்சியை வளர்த்தவருக்கு தேமுதிகவை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியாதா?

பொதுமக்கள் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும் நல்ல முடிவாகவே இருக்கும். அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். எனவே, கேப்டனை பற்றியும், தேமுதிக கட்சியைப் பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: