வியாழன், 3 மார்ச், 2016

ஈரோடு சார்பு நீதிபதி செல்வம் :எனது உள்ளாடகைகளை ஏன் சரியாக துவைக்கவில்லை பெண் ஊழியரிடம்....

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி செல்வம்   தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் வசந்திக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி  மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. விகடன்,com

கருத்துகள் இல்லை: