
இதில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசுகையில், ‘‘காந்தியின் அகிம்சை கொள்கையை சிறுவயதிலேயே மாணவ, மாணவியர்களுக்கு புகட்டுவதின் மூலம் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக வரும்போது அந்த கொள்கையை கடைபிடிப்பார்கள். நான் 24 ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்து வருகிறேன். பணியின் போது 23 முறை இடமாற்றம் செய்யப்பட்டேன். ஊழலை ஒழிக்க இதுநாள் வரை பாடுபட்டு வருகிறேன். மது குடிப்பதின் மூலம் இளைஞர்கள் கெட்டுப்போவதை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இளைஞர்கள் புதிய சமூகம், புதிய தேசம் என்ற உறுதிமொழியை ஏற்று செயல்படவேண்டும் என்றார். தினகரன்,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக