வெள்ளி, 10 அக்டோபர், 2014

தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி : தமிழக அமைச்சர்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்:

மது இல்லா தமிழகம் உருவாக்கிட வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–மிக இளவயதிலேயே அதிகமானோர் மதுபழக்கத்தால் மரணமடைகிறார்கள். அதனால் எங்களது கோரிக்கை என்னவென்றால் மதுவினால் வரும் வருமானத்தை வைத்து அரசு நடத்தாமல் முற்றிலுமாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். பெங்களூர் சிறையில் மூன்று விஐ பி பெண்களுக்கும் ஊதுபத்தி செய்யும் வேலை கொடுக்கபட்டிருக்காம் .
மத்திய அரசின் மந்திரிகள் அனைவரும் சொத்துக்கணக்கை அறிவித்திருக்கிறார்கள். தமிழக அமைச்சர்களும் தங்கள் சொத்து மதிப்பை வெளியிட்டு ஒரு ஊழலற்ற நிர்வாகம் தமிழகத்தில் நடைபெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: