திங்கள், 6 அக்டோபர், 2014

6 ஆண்டுகள் தன்னைத் தானே காதலித்து திருமணம் செய்த லண்டன் பெண் ! Grace Gelder !

லண்டன்: 6 ஆண்டுகளாக தன்னைத்தானே காதல் செய்து கண்ணாடி முன் நின்றபடி இளம்பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாக நடக்கிறது. அதே நேரத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் என்றழைக்கப்படும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களும் திருமணம் என்ற பெயரில் இணைந்து வாழ்கின்றனர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கிரேஸ் ஹெல்டர் என்ற பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற ஆசையே இல்லை. எனவே, கடந்த 6 ஆண்டுகளாக தன்னைத் தானே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.அவர் திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கி பின்னர் டேவன் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து அவர்களுக்கு திருமண விருந்து கொடுத்தார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு அவருக்கு அவரே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கண்ணாடியில் தோன்றிய அவரது உருவத்துக்கு அவரே முத்தமும் கொடுத்தார். தினகரன்.com

கருத்துகள் இல்லை: