வெள்ளி, 2 மே, 2014

ஏற்கனவே பிரதமர் ஆகிவிட்டது போன்ற கனவில் மோடி ! Right to dream !


தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே பிரதமரானதாக எண்ணிக்கொள்கிறார் மோடி: சோனியா காந்தி
உத்திரப் பிரதேச மாநிலம் பைசாபாத், பல்ராம்பூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே பிரதமரானதாக எண்ணிக்கொள்கிறார் மோடி. பதவியைத் தேடும் வேட்கையுடன் மோடி இருக்கிறார். ஊழல் புகார்களில் சிக்கிய எத்தனை அமைச்சர்களை நரேந்திர மோடி நீக்கினார்.
மோடி அனைத்து வளங்களும் ஒரே கையில் வர வேண்டும் என்றும் தாமே அதிகாரத்தின் ஒட்டுமொத்த மையம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த நாட்டின் மக்களே தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பர் என்பதை அவர் மறந்துவிட்டார்.
நரேந்திர மோடி தனக்குத்தானே பிரதமராக நினைத்து, அதை அறிவித்துக் கொண்டு, தான் ஏற்கெனவே இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிட்டதாக நடந்துகொள்கிறார்.
முடிவுகள் எல்லாம் வந்துவிட்டதுபோலும், அவர் முள்ளின் மீது அமர்ந்திருப்பதுபோலும் ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு கூறினார். 

கருத்துகள் இல்லை: