புதன், 30 ஏப்ரல், 2014

புதிய தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் துவங்கியது.

ஐதராபாத்: தெலுங்கானாவிலுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இத்தேர்தலுக்காக தெலுங்கானாவில் மொத்தம் 30,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 2 கோடியே 81 லட்சம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர். ஆளுநர் நரசிம்மன் மக்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நக்சல் ஆதிக்கம் நிறைந்த 5 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நிகழ்வுகளை போலீஸார் ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து வருகின்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: