இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என தெரிவித்தார். மேலும் தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்துவோம் என கூறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல என கடுமையாக பதிலளித்துள்ளார்.
மேலும் மோடி தனது எல்லையை கடந்து பாகிஸ்தான் மீதும் முஸ்லீம்கள் மீதும் அவர் கொண்டுள்ள பகைமையை வெளிப்படுத்துகிறார். அவர் இந்திய பிரதமரானால் அமைதி குலையும் என கூறியுள்ளார்.dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக