புதன், 30 ஏப்ரல், 2014

கோச்சடையான் பில்டப் தாங்க முடியல்ல ! காசு துட்டு உதார் உல்டா அலப்பரை ரஜனி !

ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘கோச்சடையான்’
. மோஷன் கேப்சர்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் என்.டி. டிவி இந்த வருடத்திற்கான சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருதுக்கு சௌந்தர்யாவை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சௌந்தர்யாவுடன் அவரது அம்மாவான லதா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்கள். சௌந்தர்யாவுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் விருது வழங்கி கௌரவித்தார். maalaimalar   இது போதல்லையா ? இத்தையும் கேளுங்க இந்திய சினிமா வரலாற்றிலேயே கோச்சடையன் போல ஒரு படம் வந்ததே இல்லையாம் சத்யஜித்ரெ போன்ற மறைந்த மாமேதை இயக்குனர்கள் கூட சௌந்தர்யாவின் திறமையில் பத்தில் ஒன்றுகூட கொண்டிருக்க வில்லை என்று ஒட்டு மொத்த இந்தியாவே கூறுகிறது ! ஹாலிவூட்டில் இருந்து சவுந்தர்யாவுக்கும் ரசனிக்கும் அழைப்புக்கு மேல் அழைப்பாக வந்து கொண்டிருக்கிறது இனி என்ன தமிழனின் சகல துன்பங்களும் தீர்ந்து இந்தியாவும் வல்லரசாகி விடும் எல்லாம் கோச்சடையன் மகிமை  

கருத்துகள் இல்லை: