ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: காங்கிரஸை பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது ! அடடே இளங்கோ காங்கிரசை விட்டு ஓடி விட்டாரா

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் 65-வது பிறந்த நாள் விழா மாவட்டத் தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டதால், காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், காங்கிரûஸ பிடித்த தீயசக்தி நீக்கிவிட்டதாகவே கருதுகிறேன்தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. வி.பி.சிங், குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய் போன்றோர் கூட்டணி வைத்துத்தான் மத்தியில் ஆட்சியைப் பிடித்தனர். காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் தனித்து நின்று வெற்றி பெற்ற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை ஒன்றுதான் மனதில் உள்ளது என்றார் 

கருத்துகள் இல்லை: