ஞாயிறு, 22 டிசம்பர், 2013

மறுமணம் செய்துகொண்டதால் பெண் இழப்பீடு பெற தடையில்லை மும்பை உயர்நீதிமன்றம்

கண வர் விபத்தில் இறந்த தைத் தொடர்ந்து, அதன் மூலம் கிடைக்கும் இழப் பீட்டை பெற மறு திரு மணம் செய்த பெண் ணுக்குத் தடை ஏதும் இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
மும்பையில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தவர் சந்தீப். இவருக்கு மனைவியும், பெண் குழந்தையும் உள்ளனர். சந்தீப் கடந்த 2007 ஆம் ஆண்டு அந்தேரி பகுதி யில் மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டி ருந்தார். அவர் மீது லாரி மோதியதில்  உயிரிழந்தார்.
இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுப்பு
இதைத் தொடர்ந்து விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத் தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க விபத்து இழப்பீடு வழங் கும் தீர்ப்பாயம் உத்தர விட்டது. ஆனால் சந்தீப் பின் மனைவி மறுதிரு மணம் செய்து கொண் டதை காரணம் காட்டி, அவருக்கு இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுத்து விட்டது.
தீர்ப்பாயத்தின் உத்த ரவை எதிர்த்தும், இழப் பீட்டை உயர்த்தி வழங்க உத்தரவிடக் கோரியும் சந்தீப்பின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத் தில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி தர்மாதி காரி விசாரித்தார். மறு திருமணம் செய்து கொண்ட பெண், முதல் கணவரின் விபத்து மர ணம் மூலம் கிடைக்க வேண்டிய இழப் பீட்டை பெற தடை எதுவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இழப்பீடு தொகையை உயர்த்தி நீதிபதி உத்தரவு
மேலும் சந்தீப்பின் வருமானம், அவர் உயி ருடன் இருந்தால் எதிர் காலத்தில் வருமான அதிகரிப்பு ஆகியவற்றை தீர்ப்பாயம் கவனத்தில் கொள்ளவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இதனால் இழப்பீடு தொகையை ரூ.67 லட்சமாக உயர்த்தி நீதிபதி உத்தரவிட்டார். இதில் தலா 20 சதவிகித பணத்தை சந்தீப்பின் மனைவி மற்றும் தாய்க்கு வழங்க உத்தர விட்டார். மேலும் சந்தீப்பின் 11 வயது மகளின் படிப்பு செலவு, தினசரி பரா மரிப்பு செலவு, திருமண செலவு போன்றவற்றை கருத்தில் கொண்டு அந்த சிறுமியின் வங்கி கணக் கில் இழப்பீட்டுத் தொகையில் 60 சதவிகித பணத்தை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டா
viduthalai.in

கருத்துகள் இல்லை: