சனி, 13 ஏப்ரல், 2013

நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜாரானார்

ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி முதல்
மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார்.ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஐதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: