செவ்வாய், 9 ஏப்ரல், 2013

தமிழக தாலிபான்கள் : மாணிக்க வினாயகம் இலங்கையில் பாடக்கூடாதாம்

யாழ்பாணத்து  நல்லூர் கோவிலின் அழகிய தோற்றங்கள் 
இலங்கைக்குப் போய், அங்குள்ள கோவில் ஒன்றில்
இசை நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர் பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.
இலங்கையில் நடக்கும் விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து யாரும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக திரையுலகினர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே இலங்கை சென்று வந்த அசின், பாடகர் கிரீஷ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஆகியோருக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தற்போது மிகப்பெரிய  தொல்லையாக உருவாகி இருப்பது தமிழ் நாட்டில்  தமிழ் தீவிரவாதி போர்வையில்  அரசியல் பண்ணும் சமுக விரோதிகளும்  கூத்தாடிக்களும்தான்
viruvirupu.com

கருத்துகள் இல்லை: