திங்கள், 1 ஏப்ரல், 2013

சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் ஜெயப்பிரதா

நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் சமாஜவாதிக் கட்சி எம்.பி.
ஜெயப்பிரதாவின் கடிதத்தை மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன், மாநில உள்துறைக்கு அனுப்பியுள்ளார்.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எனினும், அவருக்கு ஆளுநர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமாஜவாதிக் கட்சியின் எம்.பி. ஜெயப்பிரதாவும், அமர் சிங்கும் கோரினர். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கரநாராயணனைச் சந்தித்து இக்கோரிக்கையை வைத்தனர்.
இந்தக் கடிதத்தை மாநில உள்துறைக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: