
இந்த மனு மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது.சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த கதிரவன், கடந்த 21ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.நீதிபதி முருகன் முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. விஜயேந்திரர், சுந்தரேசன், ரகு உள்ளிட்ட 13 பேர் ஆஜராகியிருந்தனர். ஜெயேந்திரர், அப்பு உள்ளிட்ட 10 பேர் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், கதிரவன் கொலை செய்யப்பட்டதற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் கொலைக்கான முதல் தகவல் அறிக்கையின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்து, கதிரவன் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவித்தார்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், சிவக்குமார் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் அனைத்து விவாதமும் முடிந்துவிட்டதாக' தெரிவித்தனர். அப்ரூவர் ரவி சுப்ரமணியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருநாவுக்கரசு, "சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு வந்த பின், ரவி சுப்ரமணியத்தை குற்றவாளியாக அறிவிக்க கோரும் மனு மீது முடிவு எடுக்க வேண்டும்' என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு மற்றும் எதிர் தரப்பு சார்பில், தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை, எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும், என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை, வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக