வியாழன், 27 செப்டம்பர், 2012

நயன்தாரா SMS ஓடிய நடிகர்கள்!

பல நடிகர்கள் நடிகைகளை காதலித்தாலும், சிம்பு-நயன்தாரா காதல் திரையுலகமே உற்று நோக்கிய காதல். அதைவிட விறுவிறுப்பாக சென்றது பிரபுதேவா-நயன்தாராவின் காதல். இப்போது ஆட்டத்தையும், ஆடியவரையும் மறந்து தனிமையில் இருக்கிறார் நயன்தாரா.மறுபடியும் நயன்தாரா தரப்பில் காதல் பூ பூத்தால் தேன் எடுத்தே ஆகவேண்டும் என அவரையே  வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர் சில கோடம்பாக்கத்து ஹீரோக்கள். அவர்களை அலட்சியம் செய்யாமல் அன்பாக அழைத்து நல்ல முறையில் பேசி புது வழியில் நயன்தாரா அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார்.நயன்தாராவிற்கு நூல் விடுபவர்களிடம் சிம்பிளாக ’விரல்’-ஆல் டைப் செய்யப்பட்ட எஸ்.எம்.எஸ்களை காட்டுகிறாராம். அதை படித்ததும் தலை தெரிக்க ஓடிவந்திருக்கின்றனர் பலஹீரோக்கள். அப்படி என்ன தான் இருக்கிறது அந்த எஸ்.எம்.எஸ்-ல் என ஆராய்ந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

கருத்துகள் இல்லை: