புதன், 26 செப்டம்பர், 2012

மாணவன் தீக்குளிப்பு -ஆசிரியர் மோசமாக திட்டியதால், பொதுமக்கள் ஆவேசம்


பட்டுக்கோட்டையை அடுத்த  பள்ளிகொண்டான் ஊரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான் மாணவன் லாரன்ஸ்.   ஆசிரியர் இருதயராஜ்  தன்னை மோசமாக திட்டுவதாக அடிக்கடி வீட்டில் குறை கூறி வந்துள்ளான். இது குறித்து பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துள் ளனர்.  இந்நிலையில் நேற்றும் ஆசிரியர் இருதயராஜ் திட்டவும்,  மாணவன் வீட்டில் வந்து புலம்பியுள்ளான்.  பெற்றோர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கையில் மாணவன் விபரீதமாக முடிவெடுத்துவிட்டான்.
இன்று இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்த மண்ணென் னையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தான். பலத்த காயங்களுடன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 
பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.>நடந்த சம்பவம் அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து பள்ளி மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க ஆவேசமாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை: