செவ்வாய், 22 நவம்பர், 2011

நமீதா, ஸ்ரேயா குட்டை பாவாடை அணிவதை எதிர்ப்பதா? குஷ்பு கண்டனம்


நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இதுபோல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது.நடிகை ஸ்ரேயா, சிவாஜி பட விழாவில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்றார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்தது. போலீசிலும் புகார் அளித்தது. இதையடுத்து ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இதுபோல் நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார்.நடிகைகள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நடிகை குஷ்பு கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: