செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாழ் பல்கலைகழக பட்டமளிப்பு உதயன் இருட்டடிப்பு

அண்மையில் நடைபெற்ற  யாழ் பல்கலைகழக பட்டமளிப்பு விழா பற்றிய ஒரு முக்கியமான செய்தியை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழ் மக்களின் உரிமை மற்றும் கலாசார விழுமியங்கள் போன்ற விடயங்களில் சதா மாரிதவக்கை போன்று கூச்சலிடும் உதயன் பத்திரிகை இந்நிகழ்வை முற்று முழுதாக இருட்டடிப்பு செய்துவிட்டது.
இதற்கு தனிநபர் குரோதமே காரணம் என்று தெரியவருகிறது.
உதயன் பத்திரிகை ஒரு புறத்தில் சிங்கள துவேஷ அரசியல் மறுபுறத்தில் அரசாங்கத்தோடு மிக நெருக்கமாக உறவு கலத்தல் என்று இரட்டை சவாரி செய்வது எல்லோரும் அறிந்ததே.
தமிழ் மக்களின் பாரம்பரிய பெருமைகளை ஓங்கி ஒலிக்கும் யாழ் பல்கலை கழகத்தின்
பட்டமளிப்பு விழாவை இருட்டடிப்பு செய்யும் கேவலத்தை என்ன சொல்லவது?

கருத்துகள் இல்லை: