வெள்ளி, 14 அக்டோபர், 2011

இலங்கை-இந்திய கடற்படையினர் கூட்டு கண்காணிப்பு!

இலங்கை – தமிழக மீனவர்கள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் சர்வதேச கடற்பரப்பில் கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியா இந்த யோசனையை முன்வைத்துள்ளது.இது தொடர்பில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றின் போது, இலங்கை இந்திய கடற்படையினர் விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழு ஒன்றை நியமிப்பது தொடர்பிலும் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இலங்கை வந்ததிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாய், இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: