புதன், 10 ஜூலை, 2019

கர்நாடகா .. காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்க சபாநாயகர் முயற்சி ?. காங். கடும் எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.  கட்சி நிர்வாகிகள் சமாதானத்தை ஏற்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகர் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால், கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர். சட்டமன்ற வளாகத்தில், திரண்ட காங்கிரஸ் கட்சியினர் சுதாகர், சபாநாயகரை சந்திக்க வந்த போது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
tamiloneindia:  கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் சமரசத்துக்கு உடன்பாடாவிட்டால் அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை மூலம் பதவியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, பாஜகவின் பாதுகாப்புடன் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர்.

ஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்துக்கு கம்யூனிஸ்ட்கள் செய்திருப்பது துரோகம் ..பாஜகவும் காங்கிரசும் கம்யுனிஸ்டுகளும் வரலாற்று பிழை .. இடஒதுக்கீடு விவகாரம் வீடியோ


ஆளூர் ஷாநவாஸ் : சுத்தி வளைத்து கடைசியில் பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக சி.பி.எம்மும் கூறியுள்ளது.
இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியில் புறந்தள்ளபட்ட மக்களுக்கான உரிமை என்னும் அடிப்படையை புரிந்து நிலைப்பாடு எடுக்காத எந்தக் கட்சியும் சமூகநீதி மறுப்புக் கட்சி தான். காங்கிரசை போலவே கம்யூனிஸ்ட்டின் இருப்பும் ஏன் இந்தியாவில் கேள்விக்குறியாகியுள்ளது எனில் அவர்களிடம் இருக்கும் இந்த அடிப்படைச் சிக்கல் தான் அதற்குக் காரணம். பாஜக தன்னை முழுதாக ஆதரிக்கும் முன்னேறிய வகுப்புக்கு உண்மையாய் இருக்கிறது. காங்கிரசும் கம்யூனிஸ்டும் யாருக்காக இருக்கின்றன? தமிழ்நாட்டில் உங்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் பெயர் சொல்ல சில உறுப்பினர்கள் உள்ளார்கள் எனில், அதைத் தந்தது இங்குள்ள சமூகநீதிக் கருத்தியலும் அதைக் கட்டிக்காக்கும் களமுமே! அதற்கே துரோகம் செய்வீர்களா?
மக்கள் செல்வாக்கில் மிதந்த எம்.ஜி.ஆர் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் புகுத்த முனைந்து, என்ன நிலைக்கு ஆளானார் என்பது வரலாறு. அவருக்கே அந்த நிலை எனில், உங்களுக்கெல்லாம் இனி என்ன நிலை என்பதை வரும்காலம் சொல்லும்.

நாக்பூரின் இட ஒதுக்கீட்டு அழிப்புத் திட்டத்துக்கு காங்கிரஸ் துணைபோவது துரோகம் .. ஆழி செந்திநாதன்

Aazhi Senthil Nathan : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்,
மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களித்தது (திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும்தான்) எதனால்?
மோடியின் கொள்கைகளை நிராகரிக்கவேண்டும் என்று முடிவெடுத்த தமிழர்களுக்கு இந்தக் கூட்டணி ஓர் அரசியல். ஆயுதமாக, ஊடகமாக, ஒரு political agency ஆக அமைந்தக் காரணத்தால் தான்... இது தமிழ்ச்சமூகத்தின் tactical voting.
மோடி அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் எதிர்த்தே தமிழக மக்கள் வாக்களித்தார்கள்.
இன்று காங்கிரசும் மார்க்சிஸ்ட்களும் செய்திருப்பது பச்சைத் துரோகம். ஆனால் கொஞ்சமும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தமிழ்நாடே தீர்மானிக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முன்மொழிவாக இருக்கவேண்டும். அது தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலின் அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது "தமிழ்நாட்டை தமிழ்நாட்டிலிருந்தே ஆளவேண்டும், நாக்பூரிலிருந்து அல்ல" என்றார் ராகுல். நாக்பூரின் இட ஒதுக்கீட்டு அழிப்புத் திட்டத்துக்கு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் துணைபோவது காமராருக்கும் செய்யும் துரோகம்.

டேவிட் ஷுல்மன்.. இஸ்ரேலிய இந்தியவியல் அறிஞர் : தமிழை நான் ஏதோவொரு ஜென்மத்திலிருந்து அறிவேன்

வெந்து தணிந்தது காடு : டேவிட் ஷுல்மன், இஸ்ரேலைச் சேர்ந்த
இந்தியவியல் அறிஞர்; சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழ், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். தமிழின் வரலாற்றைப் பேசும் ‘தமிழ்: எ பயோகிராபி’ நூல் இவர் தமிழுக்கு அளித்திருக்கும் முக்கியமான பங்களிப்பு. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவரான ஷுல்மனுடன் பன்மொழிக்கொள்கை தொடர்பாக உரையாடியதிலிருந்து…
“தமிழின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். தமிழ் பல்வேறு ஊடுருவல்களையும் திணிப்புகளையும் கலாச்சார சந்திப்புகளையும் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறது. புறத்திலிருந்து வந்த இதுபோன்ற நெருக்கடிகளை தமிழ் எப்படி எதிர்கொண்டது என்பதைக் கூற முடியுமா?”
எல்லா மொழிகளும் சொற்கள், வெளிப்பாட்டு முறைகள், சிந்தனை முறைகள், தொடரியல் அமைப்புகள், சில சமயம் பதவியல் கூறுகள் போன்றவற்றைப் பிற மொழிகளிடமிருந்து உள்வாங்கியிருக்கின்றன. ‘தூய’ மொழி என்ற ஒன்று உலகிலேயே இல்லை. மொழியானது தூய்மை என்பதையே எதிர்க்கிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் தணியவில்லை.

வர்த்தகப் போரை மீண்டும் இழுக்கும் டொனால்டு ட்ரம்ப்மின்னம்பலம் : அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உருவாகியுள்ள வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையே அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் வர்த்தகச் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜி20 மாநாட்டுக்குப் பிறகு இந்தியாவுடனான வர்த்தக சிக்கல்கள் குறித்து டொனால்டு ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைக்காத நிலையில் தற்போது மீண்டும் விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜூலை 9) டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீண்டகாலமாக அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்து வருகிறது. இதையெல்லாம் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டுக்கு முன் இதே குற்றச்சாட்டை இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் முன்வைத்திருந்தார்.

நிர்மலாதேவி தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்-வீடியோ


tamiloneindia :அருப்புக்கோட்டை: எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க" என்று தர்காவுக்குள் தலைவிரி கோலமாக உறுமிய நிர்மலாதேவியால் அருப்புக்கோட்டையே ஆடிவிட்டது.
இதுநாள் வரை தெளிவாக இருந்த நிர்மலாதேவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டுக்கு வந்து தமிழகம் முழுவதும் பேச வைத்து விட்டார்.
"காமாட்சி அம்மன் பேசறேன்.. எனக்கு எதிரான சாட்சி சொன்ன குழந்தைங்க எல்லாம் தூக்கு போட்டு செத்து போய்ட்டாங்க.." என்று அருள்வாக்கு வந்தவர் போல உளறி கொட்டினார்.
இதையடுத்து அங்கு வந்த ஒரு வக்கீல், "இந்தாம்மா செல்போன்.. உன் புருஷன்கிட்ட பேசு" என்று போனை தரவும், அதை வாங்கி தரையில் மடார் மடார் என போட்டு உடைத்துவிட்டார் நிர்மலா. செல்போனை ரிப்பேர் செய்ய மொபைல் கடைக்கு உடன் இருந்தவர்கள் அழைத்து சென்றால், அங்கேயும் தரையில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்து உளற ஆரம்பித்துவிட்டார்.

துரைமுருகன் : அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பல முக்கிய கட்சிகளை தவிர்த்தது ஏன்?

duraimurukanதினமணி ; முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கட்சிகளை அழைத்தது எப்படி என்பது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனுக்கும்,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் இடையே காரசார விவாதம் நிகழ்ந்தது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில் அதுகுறித்த பிரச்னையை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
துரைமுருகன்: 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைப்பதாகக் கூறினீர்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு என்ன இலக்கணம். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளையும் கூட்டத்துக்கு அழைத்தது எப்படி?.
முதல்வர் பழனிசாமி: உங்களுடைய தலைவர் (மு.க.ஸ்டாலின்) கேட்டுக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையிலேயே பிற கட்சிகளுக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தோம். காவிரி பிரச்னை தொடர்பாக கடந்த முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தபோது காலையில் இருந்து நாள் முழுவதும் கூட்டம் நடந்தது. அனைத்துக் கட்சிகள் எனில் கூட்டத்துக்கு 60 முதல் 70 கட்சிகளையாவது அழைத்திட வேண்டும். கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்படாத சில கட்சிகளையும் அழைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதன்படியே பிற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது நிர்வாக தலைவர் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது நிர்வாக தலைவர் அறிவிப்புdailythanthi.com : சர்ச்சைக்குரிய அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் நேற்று அறிவித்தார். ஹாங்காங், சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை மக்கள் ஏற்காமல், இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ஹாங்காங் நிர்வாகம் பணிந்தது.
மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும் மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். இது ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு பெருத்த தலைவலியை கொடுத்து வந்தது.

Computer vision syndrome.. காக்க காக்க கண்களைக் காக்க

Sundar. P : Computer vision syndrome
By- Dr.Rohini krishna
விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த போது, ஒரு காட்சியைப் பார்த்தேன்.
இரண்டு வயதிருக்கும் ஒரு சிறு குழந்தை. கையில் ஆன்ட்ராய்டு ஃபோனை வைத்துக் கொண்டு, இரவு பத்து மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை சுறுசுறுப்பாக, ஒரு வினாடி இடைவெளியின்றி ஸ்க்ரோல் செய்து நோண்டிக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல், எட்டிப் பார்த்த இன்னொரு குழந்தையை “டப்” பென்று, ஒன்று போட்டது.
இதில் விபரீதம் என்னவென்றால், குழந்தையின் தாய், பெருமையுடன் அகமகிழ்ந்து இரண்டையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணின், அகாமடேஷன் தசைகளே வலுப்பெற்றிருக்காது. அந்த வயதில் , பூப்போன்றிருக்கும் குழந்தையின்
விழித்திரையில், நேரடியாகப் பாயும் LED வெளிச்சம் எத்தனை கெடுதல்!
விளையாட்டுச் சாமான் போல் எலெக்ட்ரானிக் சாமன்களை , குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு, அதைப் பெருமையோடு எல்லோரிடமும் சொல்லிப் பூரிக்கும் பெற்றோரை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
கணினிக் கண் கோளாறு, எனப்படும் computer vision syndrome இன்று பெருநகர, கண் மருத்துவர்கள், மிக அதிகமாகச் சந்திக்கும் வியாதி.
சாஃப்ட்வேர் துறையில் வேலையில் சேர்ந்து, இரண்டு வருடங்களுக்குள், டாக்டரிடம் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கண்களில் வலி, கண் சோர்வு, எரிச்சல், தலைவலி, மங்கலாக , இரண்டிரண்டாக சில நேரங்களில் மட்டும் தெரிவது, எல்லாமே இதன் அறிகுறிகள்.
காரணம் என்ன?
சாதாரணமாகப் புத்தகம் படிக்கும் போது, குறுக்கு வாட்டில் படிக்கிறோம்.

செவ்வாய், 9 ஜூலை, 2019

10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கிடைக்கப் போவது ஏமாற்றம்தான் ..

Muralidharan Pb : மேற்குத் தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து
இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரயில்வேயில் வேலை செய்யும் கணேசன் தனது மகன் வைத்தீஸ்வரனை எப்படியாவது ரயில்வேயில் பணிக்கு அமர்த்திட படிக்க வைக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருகிறார் ராமன். கை நிறைய சம்பளம்.
இன்சூரன்ஸ் ஏஜெண்டான கோபாலன் தனது மகன் ராமனை தன்னைப் போலவே ஏஜெண்டுகளாக்கிட முயன்று அதில் வெற்றி பெறுகிறார்.
கோவில் அர்ச்சகராக பணியாற்றி வரும் மாதவன் தனது மகன் ராகவனையும் வேதங்கள் பயிலவைத்து அர்ச்சகராக்குகிறார்.
ஆனால் இவர்களது அடுத்த தலைமுறைக்கு தங்களது தந்தையார் போல அதே பணியை செய்ய விரும்பவில்லை.
வங்கியில் வேலைக்கு முயலும் வைத்தீஸ்வரனின் மகள் அலமேலு. அவள் தந்தைக்கு மாதம் 64000 சம்பளம். மகளை படிக்கவைக்க பயிற்சி நிறுவனத்தில் தனது சேமிப்பை எடுத்து செலவிடுகிறார்.
இரவும் பகலும் உழைத்து மாதம் சுமார் 40000 சம்பாதிக்கும் ராமன் தனது மகன் கௌஷிக்கை பயிற்சி வகுப்பில் சேர்த்து நீட் எழுத வைக்கிறார்.

சென்னை .ஓரினசேர்க்கை .. மனமுடைந்த இளைஞர் தற்கொலை .

வெப்துனியா :சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்துவந்த ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட வட இந்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் படேல் எனும் 20 வயது இளைஞர் சென்னையில் முடிதிருத்தும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். தனது தொழில் திறமையால் அனைவரையும் கவர்ந்த இவர் தனது மற்றொரு இயல்பால் அனைவராலும் கேலி செய்யப்பட்டுள்ளார். இவர் ஓரினச்சேர்க்கை மீது ஈர்ப்புக் கொண்டவர் என்பதால் இவரின் நடை, உடை மற்றும் பாவனைகளை அவரது நண்பர்கள், அவருடன் வேலை செய்வோர் மற்றும் உடன் தங்குவோர் ஆகிய அனைத்துத் தரப்பினரும் அவரைக் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன அவினாஷ் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதி வைத்துட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கோஷம்


  தினத்தந்தி : கர்நாடகத்தில் கடந்த 13 மாதங்களாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி என்பதால், இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை எதிர்பார்ப்பதால் நெருக்கடியான நிலையே தொடர்கிறது.
அதே சமயம் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் கூட்டணி அரசை கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்ற அவ்வப்போது வியூகங்களை வகுத்து வருகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆளும் காங்கிரசுக்கு சபாநாயகரையும் சேர்த்து 79 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 பேர் என 116 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரிப்பதால் அரசுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்)  கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர்.
இவர்கள் தனி விமானம் மூலம் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாரதீய ஜனதா செய்ததாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல.. தடயவியல் நிபுணர் உமாநாத்


தினமணி: திருவனந்தபுரம்: புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த டாக்டர் உமாநாத் கூறிய விஷயங்களை மேற்கோள் காட்டியிருக்கும் டிஜிபி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் என்னிடம் கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்து கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாகக் கூறினார். கேரளாவில் பல்வேறு வழக்குகளில் டாக்டர் உமாநாத்தின் தடயவியல் நிபுணத்துவம் காரணமாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலியில் இருந்து பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் ... விமான சேவையில் தமிழகம் புறக்கணிப்பு

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள் வீரகேசரி : சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை, சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
 இதற்கமைய, கடந்த 05ஆம் நாள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

கர்நாடக காங்கிரஸ் அதிரடி : எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்!'- அ.தி.மு.க பாணியில் சித்தராமையா

சித்தராமையாகலிலுல்லா.ச- விகடன் : ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அவரை மாற்றவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 3 பேர் என மொத்தம் 13 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
ராஜினாமாவைத் தொடர்ந்து அனைவரும் மும்பையில் உள்ள சோஃபிடெல் ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் மஜத நிர்வாகி தேவகவுடா, முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர்.

வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டது .. எம்பி ஆகிறார் .. உருக்கமான பேட்டி .. வீடியோ


tamil.oneindia.com -vishnu-priya : சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்பட்டது மகிழ்ச்சி. அது ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததாக வைகோ பேட்டி அளித்தார்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து வரும் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அதிமுக 3 இடங்களிலும் திமுக 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் திமுக 3 இடங்களில் ஒரு இடத்தை மதிமுகவுக்கு ஒதுக்கியுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார்.
 இதனிடையே தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வைகோ நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டால் திமுக சார்பில் என் ஆர் இளங்கோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் வைகோவின் வேட்புமனு இன்று ஏற்கப்பட்டுவிட்டது.

வைகோ உட்பட ஏழு வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டது . திமுகவின் நான்காவது வேட்பாளர் வாபஸ் பெறுவார்

மாநிலங்களவை தேர்தல் : 7 வேட்பு மனுக்கள் ஏற்பு, 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
தினத்தந்தி மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பரிசீலனையில் 7 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது,4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக ஆதரவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சுயேச்சைகள் 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார்

Durga Stalin prayed in Athi Varadar Kanchipuram Durga Stalin prayed in Athi Varadar Kanchipuram tamil.oneindia.com/authors/hemavandhana: சென்னை: திமுக தலைவா் ஸ்டாலினின் மனைவி துா்க்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்று சென்றார்.
திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார். அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். ஆனால் கூடவே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும்.

தர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்! -அலறும் அருப்புக்கோட்டை!

nnakkheeran.in - cnramki: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுத்து,  ‘காமாட்சி அம்மன்’ தனக்குள் இறங்கியிருப்பதாகக் கூறி, கண்களை மூடி தியானிப்பதுபோல் ஏதேதோ செய்து, தன்னை மாட்டிவிட்ட கல்லூரி மாணவிகள் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம் பொய் பேசி, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுபோல் நடந்துகொண்டார் நிர்மலாதேவி. அதனைத் தொடர்ந்து,  தான் வந்த டாக்சியில் அருப்புக்கோட்டை சென்றுவிட்ட அவரிடம், வழக்கறிஞர் ஒருவர் “உன் கணவரிடம் பேசு..” என்று தன்னுடைய மொபைலைக் கொடுத்திருக்கிறார்.
அந்த செல்போனைக் கையில் வாங்கிய நிர்மலாதேவி,  இரண்டு தடவை தரையில் அடித்ததால், ‘டெம்பர் கிளாஸ்’ உடைந்துவிட்டது.  அதனைத் தொடர்ந்து, மொபைல் கடையில் தரையில் அமர்ந்து, கோர்ட்டில் நடந்துகொண்டது போலவே கண்களை மூடி முனக ஆரம்பித்திருக்கிறார்.  அவரை அங்கிருந்து கிளப்புவதற்குள், அந்த மொபைல் கடை ஊழியர்கள் படாதபாடு பட்டனர். அதன்பிறகு, தான் ஓட்டிவந்த டூ வீலரை எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு,  தன் இஷ்டத்துக்கு சாலையில் அங்குமிங்குமாக நடந்து போனார். தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, சாலையில் கிடந்த காகிதங்களை அவர் பொறுக்கிட, மக்கள் அவரை பீதியுடன் பார்த்திருக்கின்றனர்.

திமுகவின் 4வது வேட்பாளர் .. அதிமுக + பாமகவுக்கு ஸ்கெச் ?

Sherlin Sekartamil.oneindia.com  :  சென்னை: தமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 4 வது வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். 
இதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை அதிமுக 3 இடங்களையும், திமுக 3 இடங்களையும் நிரப்ப முடியும். அந்த வகையில் அதிமுக தங்கள் கட்சியில் இருந்து 2 வேட்பாளர்களையும், பாமகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்துள்ளது. திமுகவும் அதுபோல தங்கள் கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்களையும், மதிமுகவுக்கு ஒரு இடத்தையும் கொடுத்திருந்தது. இந்நிலையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே வைகோ மீதான தேசதுரோக வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

வருடலில் ஒரு ஆணுக்கு.. ஆணுடல் பற்றிய அறிவு பெண்களுக்கு இருக்கிறதா?

Vijay Bhaskarvijay : வருடலில் ஒரு ஆணுக்கு மிக மிக சுகம் கொடுக்க கூடிய இடம் எது ?
அது விதைக்கொட்டைக்கு கீழ் பகுதியான Perineal raphe ஆகும்.
படத்தில் இதை பச்சை முக்கோணத்தில் காட்டியுள்ளேன்.
அதிலும் இரண்டும் சேரும் நடுவில் தையல் போட்டால் போன்றிருக்கும் இடத்தை வருடினால் ஆண் சொக்கிப் போவான்.
வைத்து அழுத்தி வருடி தொலைக்க கூடாது. அவன் துடித்து விடுவான்.
சட்டையில் தூசி ஒட்டி இருந்தால் அது சட்டையில் படிந்து விடாதபடி மென்மையாக தட்டி விடுவோமே அப்படி மெலிதாக வருடி விட வேண்டும்.
மொத்தமாக வருடுவதை விட ஆள்காட்டி விரலால் கீழிருந்து மேலே இழுத்து மென்மையாய் வருடிவிட்டால் ஆணுக்கு பிடிக்கும்.
ரிலாக்ஸாகி சிலிர்த்துப் போவான்.
பொது இடத்தில் இதை செய்ய முடியாது.
தனியறையில் நல்ல பிரைவேசியில் மட்டும்தான் இதை செய்ய முடியும்.
நான் கேள்விப்பட்டது வரையில் பொதுவாக படுக்கை அறையில் நம்மூர் ஆண்கள் மிகப்பெரிய தியாகிகளாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்று ஒரு வருடல் சுகம் கூட சரியான முறையில் கிடைப்பதில்லை.

ஸ்டாலின் : ஏமாற்று வாக்குறுதிக்காக இடஒதுக்கீட்டுக் கொள்கையை பலிகொடுத்துவிடக் கூடாது! அனைத்துகட்சி கூட்டம்

வி.ஶ்ரீனிவாசுலு விகடன் - பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது. நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. சில மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இன்னமும்
அனைத்துக்கட்சி கூட்டம்அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் சட்டமன்றத்தில் கடந்த 2-ம் தேதி பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இன்று மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது, முதல்வர் இதற்குத் தலைமை தாங்கினார். தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

திங்கள், 8 ஜூலை, 2019

பாஜகவுக்கு காங்கிரஸ், மஜத பதிலடி.. கூண்டோடு பதவி விலகல் ...

Veerakumar  /tamil.oneindia.com: பாஜகவை உடைத்து காங்கிரஸ் பதிலடி 
பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து, இன்று அதிரடி முடிவை எடுத்துள்ளனர். 
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதில் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். 
இதனால், ஆட்சிக்கு ஆபத்து அதிகரித்த நிலையில், அமைச்சர் நாகேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இதுவரை எம்எல்ஏக்கள்தான் ராஜினாமா செய்தனர், 
இன்று அமைச்சரும் ராஜினாமா! கவிழும் நிலையில் கர்நாடக அரசு ஆட்சி கவிழும் நிலை சுயேச்சை எம்எல்ஏ வான நாகேஷுக்கு, குமாரசாமி அரசில் கடந்த மாதம்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரும் அரசை கைவிட்டுவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

10 வீத இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆதரவு ...பாஜக பாதையில்தான் போகுமென்றால் என்ன வெங்காயத்துக்கு ...

aloor.shanavas : பா.ஜ.க போகும் பாதையில் தான் காங்கிரஸ் பயணிக்கும் எனில், பிறகு என்ன மதச்சார்பற்ற கட்சி வெங்காயம் அது இது எல்லாம்.
வடமாநில உயர்சாதி வாக்குவங்கிக்கு அஞ்சியே இந்த 10% இடஒதுக்கீடு எனும் சமூக அநீதிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவனும் காங்கிரசை திரும்பிக்கூட பார்க்கவில்லை. படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து நின்ற நிலையில், தென் மாநிலங்களின் தயவால் காங்கிரசின் இருப்பு நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. அப்படியிருக்க, இங்கே 3% கூட இல்லாத உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடை கொடுக்கலாம் என காங்கிரஸ் சொல்கிறது எனில் எவ்வளவு ஆணவம் இது.
காங்கிரசை தடம் தெரியாமல் அழிக்க ஆர்.எஸ்.எஸ் தேவையில்லை. பா.ஜ.க.வோ, மோடியோ, மாநிலக் கட்சிகளோ தேவையில்லை. காங்கிரசே போதும்!

முகிலன் ...கவிஞர் தாமரை உண்மையாகவே தாமரையின் கவிஞர் ஆகிவிட்டார்?

மனுஷ புத்திரன் :முகிலனும் தாமரையும்...
அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு.
அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை 'என்கவுண்டர்' செய்கிறது அல்லது ' கேரக்டர் அசாசினேஷன் ' செய்கிறது.
ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பது தான் வியப்பாக உள்ளது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர் மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்குத் தீர்வுகளைக் காண உரிமையுண்டு.
ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் போது அவனுக்கு சமூகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்க விடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனைப் படுகொலை செய்வதற்குச் சமமானது.
தருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டார் என்பதால் மட்டுமா?