ராஜினாமாவைத் தொடர்ந்து அனைவரும் மும்பையில் உள்ள சோஃபிடெல் ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் மஜத நிர்வாகி தேவகவுடா, முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அறிந்து அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால்
கடுப்பான சித்தராமையா , ``ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த காங்கிரஸ்
எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அவ்வாறு
நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆறு வருடங்களுக்கு
தேர்தலில் நிற்க முடியாது. வேறு எந்தப் பதவியிலும் தொடர முடியாது” என்றார்.
அதன்படி, ராஜினாமா செய்த கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம்
செய்யக் கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் கடிதம் தரப்பட்டது. அவர்கள் 6
வருடங்கள் போட்டியிட தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக