இரா­ணு­வத்­தினர் உட்­பட முப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.  இதே­வேளை தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜ­வல பகு­தியில் இன­வா­தி­களால் தீ மூட்­டப்­பட்டு எரிக்­கப்­பட்ட வீட்­டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. 21 வய­து­டைய அப்துல் பாஸித் எனும் இளை­ஞரின் சட­லமே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ­ரது ஜனாஸா நேற்று மாலை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் கண்டி மாவட்டம் முழு­வதும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று காலை அது தளர்த்­தப்­பட்­ட­துடன் மீண்டும் தெல்­தெ­னிய மற்றும் பல்­லே­கல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளுக்கு மட்டும் மறு அறி­வித்தல் வரை ஊரங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.