வியாழன், 8 டிசம்பர், 2016

முழுவதுமாக பாஜகவின் (முதலை) வாய்க்குள் விழுந்துவிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டாலும், ஜெ. இல்லாத அ.தி.மு.க.வை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்க மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது என்று ஒரு தரப்பும், சசிகலாவின் சட்டத்துக்குப் புறம்பான அதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என இன்னொரு தரப்பும் அனல் கிளப்புகிறது.
""ஜெ. உடல்நலன் பற்றிய அறிவிப்பினால் சென்னைக்கு அவசரமாக திரும்பிய கவர்னரை, தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், ஷீலாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்தனர். அந்த சந்திப்பிலேயே, நடந்த வற்றைத் தெரிந்துகொண்டுதான் அப்பல்லோவுக்கே சென்றிருக்கிறார் கவர்னர்.
இந்த நிலையில், 5-ந்தேதி காலையில் ராமமோகனராவை வரவழைத்து விவாதித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், ""ஆளும் கட்சியின் சட்டமன்ற தலைவரை புதிதாக தேர்ந்தெடுத்து இன்றைக்குள் தெரிவிக்க வலியுறுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார் கவர்னர். இதனையடுத்து 8 மணிக்கு அப்பல்லோ வுக்கு வந்தார் தலைமைச்செயலாளர். அப்போது மருத்துவமனையில் இருந்த டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர், ராமமோகனராவோடு இணைந்துகொள்ள, அவர்கள் சசிகலாவை சந்தித்தனர். அதேசமயம், அமைச்சர்கள் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கவர்னர் அழுத்தமாக சொல்லியனுப்பிய தகவலை சசிகலாவிடம் தெரிவித் தார் தலைமைச்செயலாளர்.

நக்கீரன் : அப்போலோவில் அந்த கடைசி நிமிடங்கள் .. என்னதான் நடந்தது?


""ஜெ.வுக்கு சுவாசம், இதயத்துடிப்பு ஆகியவற்றை சீராக வைத்திருப்பதற்கே அப்பல்லோ டாக்டர்கள் பெரும்பாடு படுகிறார்கள்'' என்கிற முத்திரை வாசகங்களுடன் கடந்த 4-ம் தேதி அன்று வெளிவந்த நக்கீரனில் "அதே கண்டிஷன்! அடுத்தகட்ட சிகிச்சை' என்கிற அட்டைப்பட கட்டுரையில் எழுதியிருந்தோம். அன்று மாலை 4.30 மணிக்கு ஜெ.வின் இதயப் பகுதியில் பிரச்சினை வெடித்தது. ;அப்பல்லோ மருத்துவமனையின் இரண் டாவது மாடியில் ஜெ.வுக்கென அமைக்கப் பட்டிருந்த அறையில் படுத்திருந்த ஜெ.வின் மார்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. ஜெ.வின் துடிப்பு மிகுந்த அசைவுகளில் ஏதோ ஒன்று விபரீதமாக நடப்பதை அந்த அறையிலிருந்த மெர்ஸி என்கிற நர்சுக்கு உணர்த்தியது. உடனே ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கும் இதய நோய் நிபுணர் டாக்டரையும் மற்றவர்களையும் அந்த  அறைக்கு வரும்படி அழைப்புகள் பறந்தன. அவர்கள் வருவதற்குள் அந்த அறைக்கு எதிர்புறம் உள்ள கிரிட்டிக்கல் கேர் யூனிட்டிற்கு ஜெ.வை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டு சென்றார்கள் டாக்டர்கள். உடனடியாக செயற்கை சுவாசத்தை அவர் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருந்த டிராக்கோஸ்டமி ட்யூப் மூலமாக கொடுத்தார்கள். செயற்கை சுவாசம் அளித்தபிறகும் அவரது இதயத் துடிப்பை காட்டும் கருவி கிட்டத்தட்ட இதயம் நின்றுபோனதைப் போல மெதுவாக இயங்குவதைக் காண்பித்தது.

அதிமுக புதிய பொதுச்செயலாளர் செங்கோட்டையன் ?

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார்? என்று தொண்டர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா, தம்பித்துரை, செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் புதிய பொதுச்செயலாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு இறந்தார். இதையடுத்து அவர் உடல் நேற்று மாலை சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து புதிய முதல்வராக தமிழக அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஜெயலலிதா மறைந்த பின்பு, சில நிமிடங்களில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 133 அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்து அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டனர்.

ஒரு ஆணாக மோடியை ஆதரிக்கலாமா ? ஒரு பெண்ணாக ஜெயாவை ஆதரிக்கலாமா?

jaya1ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக கடுமையாகவோ இல்லை கடுமையற்றோ எதிர்க்கும் சிலரும் “ஒரு பெண்ணாக” நான் அவரை ஆதரிக்கிறேன் என்பார்கள். இத்தகைய அபத்தமான வாக்கியத்தின் பொருளை அழகாக கூர்மையாக விமரிசிக்கிறது இப்பதிவு. ஃபேஸ்புக்கில் எழுதியவர்  Valan Antony.அவருக்கு எமது நன்றி!வினவு .காம்.
ஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன், ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ, அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.
இதில் அரசியல் அறியாத பெண்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல என்பது தான் வேதனை.
இங்குள்ள அனைத்து அல்லது பெரும்பாலான பெண்கள் ஜெயலலிதாவை தங்கள் ஆதர்ஷ நாயகியாக, அல்லது தாங்கள் விரும்பும் அவதார மனிதராக, மிகச் சிறந்த தைரியசாலியாக, நிர்வாகியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக முன் நிறுத்துது என்பது அவர்களின் அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்பதையும் தாண்டி,ஜெயலலிதாவின் இத்தனை ஆண்டு அராஜகத்தையும் ஆதரிக்க ஒரே பாலினமாக இருந்தால் போதும் என்ற இவர்களின் அபத்தமான வாதங்கள் கடுப்பை தான் நமக்கு தருகிறது.
ஜெயலலிதாவின் அரசியலை துளி கூட விரும்பாதவன். அவர் பெண் என்பதற்காகவே அவரை வெறுக்கும் அளவுக்கு பாலின வெறுப்போ ஆணாதிக்க சிந்தனையோ கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா ஒரு சாபக்கேடு என்ற கருத்தில் இன்று வரை மாற்றம் இல்லை.
வயதில் சிறியவர்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை கட்டாயம் காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லி அவமரியாதை செய்வது தான் ஆளுமைத் திறனா?

ஜெயலலிதாவால் தவிர்க்கப்பட்ட நடராஜன் சீனுக்கு வந்தார் பேட்டியும் கொடுக்கிறார் !



அதிமுக பொதுசெயலாளர் தம்பிதுரை? .. சசிகலா? ...சைக்கிள் கேப்பில் நடராசன்?

மோடி : உன்னைய எனக்கு தெரியும் என்னைய உனக்கு தெரியும்.  ஆனா மக்களுக்கு நம்ம இருவரை பத்தியுமே  தெரியாம இருக்கணும் அதுதான் முக்கியம்  .தமிழக முதல்வர் ஜெயலலிதா. மறைந்த சோகம் முடிவதற்குள் பல்வேறு அரசியல் நடந்து வருகிறது. உடன் பிறவா சகோதரி முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே அந்த பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தார். மத்திய அரசு விரும்பிய பன்னீர் செல்வம் தான் முதல்வர் பொறுப்பு ஏற்றார். இது சசிகலாவுக்கு கிடைத்த முதல் அடி. தற்போது பொதுச் செயலாளர் பதவிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆசைப்படுகிறார். இதுவும் மத்தியில் இருக்கும் பிரதமர் மோடியின் தயவால் தம்பிதுரைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பொது செயலாளர் பதவிக்கு குடுமிபிடி சண்டை துவங்கியதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கிறது. ஜெயலலிதாவால் எதுவும் நேரடி நலன்கள் எதுவும் பெறாத சாதாரண தொண்டா்கள் சாரை சாரையாக அடக்கம் செய்யப்பட்ட இடம் முன்பு மொட்டை அடித்து கதறி அழுகின்றனா். அவா் உடன் இருப்பவா்கள் பதவிகளை கைப்பற்ற இன்றே சண்டையை துவக்கி விட்டது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது ?!முகநூல் பதிவு

ஜெயலலிதா மறைவு ...உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.

ஜெயலலிதா மறைவு தாங்காமல் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. அ.தி.மு.க. அறிவிப்பு<>அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-> உலக மக்கள் நெஞ்சங்களில் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய ‘அம்மா’வாக என்றும் வாழும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டும், அவர் மண் உலகைப் பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ரங்கநாதன், காஞ்சீபுரம் மாவட்டம் முதலியார் குப்பத்தை சேர்ந்த பெருமாள், ஓரிக்கையை சேர்ந்த ராஜன், கரிமேட்டை சேர்ந்த பெரியநாயகி, நெல்வாய்கிராமத்தை சேர்ந்த ஜி.செல்லன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஆர்.குமாரவடிவேல், தாம்பரத்தை சேர்ந்த ஆர்.சற்குணம். திருவள்ளூர் மாவட்டம் பசியாவரக்குப்பத்தை சேர்ந்த சின்னக்குழந்தை, கொண்டஞ்சேரியை சேர்ந்த வடமலை, திருப்பாலைவனத்தை சேர்ந்த நைனியப்பன்.

அதிமுகவை உடைத்து பா.ஜ.க வல்லூறுகளுக்கு விருந்தாக்க துடிக்கும் RSS சங்பரிவார் சொம்புகள்


வட்டமிடும் வல்லூறுகள்..
"""""""""""""""""""""""""""""""""""""""""""" இன்றைய 'தினமணி' நாளிதழில் வெளிவந்துள்ள வைத்தியநாதனின் தலையங்கத்தையும், அருகே இடம் பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் "ந பூதோ ந பவிஷ்டி" என்ற அழகு தமிழ்க் கட்டுரையுந்தான் நண்பரின் கவலைக்குக் காரணம்.
வைத்தியநாதன் எழுதியுள்ள தலையங்கத்தில் ஜெயா மரணத்திற்குப் பின் அதிமுக அரசிலும் கட்சியிலும் செய்துள்ள மாற்றங்களை ஆகா ஓகோ எனப் பாராட்டுகிறார். ஓபியை முதல்வராகவும் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுப்பது அற்புதமான் முடிவு என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் "பவிஸ்து பிவிஷ்து" கர்ட்டுரையில் 2011 தேர்தலுக்கு முன் அவர் ஜெயாவை சந்தித்த கதையைச் சொல்கிறார். ஜெயா திமுக, காங்கிரஸ் அரசுக்ளின் செயல்பாடுகள் குறித்துக் கவலைப் பட்டாராம். அவற்றை எதிர்கொள்ள இவர் ஒரு மாற்று உத்தியைச் சொன்னாராம் (வேறு என்னவாக இருக்க முடியும். பா.ஜ.க ஆதரவு என்பதாகத்தான் இருக்கும்). அதை ஜெயா ஏற்கவில்லையாம். ஆனால் அவரது 'உயிர்த் தோழி' ஏற்றுக் கொண்டாராம்.
அதாவது இவரது "ஆலோசனைகளுக்கு" ஜெயலலிதாவைக் காட்டிலும் சசிகலாவிடமே வரவேற்பு இருந்ததாம். இப்போது வைத்தியநாதன் சசிகலாவை அதிமுக பொ.செ ஆக ஆக்குவதைக் கொண்டாடுவதன் பொருள் விளங்கும். ஜெயலலிதாவின் உடல் அருகே அன்று ராஜாஜி மண்டபத்தில் வெங்கையாவும், பொன் ராதாகிருஷ்ணனும் கடைசிவரை உட்கார்ந்திருந்ததும் நரேந்திர மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் வழங்கியதையும் மறந்து விடக் கூடாது.
மாஃபியா கும்பலுக்குக் காசு ஒன்றே பிரதானம். கட்சியை உடைத்து பா.ஜ.க வல்லூறுகளுக்கு தமிழகத்தை விருந்தாக்க எல்லா வாய்ப்புகளும் காத்திருக்கிறது என்பதைத்தான் இதெல்லாம் காட்டுகிறது.
சும்மா ஆடுமா சோழியன் குடுமிகள்..  முகநூல் பதிவு   மாக்ஸ் அந்தோணிசாமி

புதன், 7 டிசம்பர், 2016

தனது படத்தையும் அறிக்கையையும் வெளியிட கோரிய ஜெயலலிதா .. நிராகரித்த சசிகலா .. அப்போலோ வட்டாரங்கள் தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது முகத்தை காண வேண்டும் என கடந்த 75 நாட்களாக தொண்டர்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தனர். ஆனால் கடைசியில் அவர் மரணமடைந்த பின்னரே அவரை பார்க்க முடிந்தது பலருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என ஜெயலலிதா மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது தோழி சசிகலா அதனை நிறைவேற்றவில்லை என மருத்துவமனை வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருக்கும் போது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. அப்போது மருத்துவர்களிடம் தான் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது என கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் பதில் சொன்னதும், ஐய்யோ இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என வருந்தியுள்ளார். உடனடியாக என் புகைப்படத்தையும், அறிக்கையயும் வெளியிட ஏற்பாடு செய்ய மருத்துவர்களிடம் கூறியுள்ளார் ஜெயலலிதா. மருத்துவர்கள் அதனை சசிகலாவிடம் கூற சசிகலா அதற்கு மறுத்துள்ளார். கடைசி வரைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது கடைசி ஆசையை நிறைவேற்றவே இல்லை அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா. வெப்துனியா.காம்

மிடாஸ் உட்பட 9 சாராய ஆலைகளின் அதிபராக (MD) சோ ராமசாமி இருந்தார் .. வெளிவரும் வண்டவாளம் !

பிரசாந்த் பூஷன்சசிகலா vs சோசென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 கம்பெனிகளின் எம்டியாகவும் இருந்து செயல்பட்டவர்.
அரசியல் விமர்சகராக பத்திரிகையாளராக செயல்பட்ட சோ ராமசாமி பல முக்கிய தலைவர்களுக்கு ராஜகுருவாகவும் இருந்தார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் நண்பராகவும் இருந்தார் சோ.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தொடக்க காலங்களில் சோதான் ஆலோசகர் நண்பர் எல்லாம்.... பின்னாளில்தான் சசிகலா மெல்ல மெல்ல அந்த இடத்தை கைப்பற்றுகிறார். ஆனாலும் சசிகலாவை ஜெயலலிதா வேண்டாம் என முடிவு செய்து போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றிய காலங்களில் மீண்டும் சோதான் போயஸ் கார்டனில் கோலோச்சுவது வாடிக்கையான ஒன்று. அத்துடன் தமக்கு சொந்தமான நிறுவனங்களில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப்பட்டு அவற்றின் முழு பொறுப்பையும் சோ ராமசாமியிடம் கொடுத்திருந்தவர் ஜெயலலிதா.

நடராஜனை சிறையில் தள்ளியதற்காக ஜெ.வை பழிவாங்கி விட்டார் சசிகலா.. சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு

Sasikala Pushpa talks about Jayalalitha's death சென்னை : 2011ஆம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அது முதலே ஊடகங்களில் பரபரப்பாக பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே சசிகலாவிற்கு எதிராக பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணமடைவதற்கு முன்பாகவே அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுப்பினார். இந்த நிலையில் இன்று சசிகலா நடராஜனுக்கு எதிராக புதிய புகார் ஒன்றை கிளப்பியுள்ளார் சசிகலா புஷ்பா. மரணமடைந்த ஜெயலலிதாவின் உடன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் உடலை சுற்றியும் அவரது மன்னார்குடி குடும்பத்தினர்தான் நின்று கொண்டிருந்தனர். சசிகலா குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தது பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியது. அதுவும் பார்வையாளர்கள் அருகில் சென்று விடாமல் ஒருவர் நந்தி போல நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி வந்தபின்னரே அந்த நபர் நகர்ந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்! தமிழக மக்களே ஏமாற வேண்டாம்!

01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.
 02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.
 03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.
 04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??
 05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?
06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??
07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?
08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

சோவுக்கு நெட்டில் அருச்சனை : தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் திராவிடர் என்ற சொல்லின் மீதும் உள்ள குரோதம் இறுதி வரை மாறவே இல்லை

முகநூல் பதிவுகள் :
1) பெரியார் திடலுக்குள் நுழைந்து அய்யா வாழ்ந்த அறைக்குள் வேண்டுமென்றே சிகரெட் பிடித்த அநாகரீகன்,
2)திடலுக்குள் வந்து பூணூலை வெளியில் இழுத்துவிட்டு 'நான் பூணூல் போட்ட பிராமணன்' என சொன்ன சனாதன வெறியன்,
3)விடுதலைப்புலிகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்த இன எதிரி,
4) தமிழர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கவே துக்ளக் எனும் பத்திரிக்கையை நடத்திவந்த தமிழின பகைவன்,
5)இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சமத்துவ விரோதி,
6) பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் (பார்ப்பன பெண்கள் உட்பட)என வெளிப்படையாக பேசிவந்த பெண்ணின எதிரி,
7) இவன் தந்தை சாராய உடையாரின் அறக்கட்டளை தலைவனாக இருந்ததால் எரிசாராய ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்த கபட வேடதாரி,
8) சங்கர மட ஊழல் குறித்து எழுத மாட்டேன் அது நான் மதிக்கும் இடம் என பேசிய போலி ஊழல் எதிர்ப்பாளன்,
9) சங்கராச்சாரி மீதான கொலை வழக்கு குறித்து கருத்து சொல்லாத புரட்டு நடுநிலைவாதி,
இன்னும் எவ்வளவோ.................
இவன் இழவுக்கு நாகரீகமாக பேச அறிவுரை வழங்கும் நண்பர்களே,
இவனுக்கு மரியாதை செலுத்தினால்தான் மனித நேயர் பட்டமும், நாகரீக மனிதர் பட்டமும் கொடுப்பீர்கள் என்பது எவ்வகையில் நியாயம் ?
தேவநாதன் தீனதாயளன் இருவரையும் பற்றிய துணுக்கு கூட போடதா உண்மையை உரைப்பவன் நடிகர்கள் கூறிய பெயர் உண்மையை தவிர வேறுஏதும் பேச மாட்டார் என விளம்பியது!

Flash Back :Sasikala Giving Slow Poison To Jayalalithaa?, Tehelka Report


/archive.tehelka.com/story_main51.asp?filename=Ne040212Coverstory.asp

Chennai, Jan 31: The Tehelka magazine today frontpaged an  exclusive report about Jayalalithaa's estranged confidante Sasikala having conspired to give slow poison to the AIADMK supremo, because of which she and her family members were packed off from the ruling establishment. The report said, Jayalalithaa was allegedly given sedatives and chemical substances that had small quantities of poison by a nurse appointed by Sasikala. The report doesn't quote sources but says that Sasikala, 55, was guilty of planning a palace coup and of the Mannargudi mafia hoping to replace Amma (Jayalalithaa) with Chinnamma (Sasikala) as chief minister. The report says, Jayalalithaa travelling to Bangalore in connection with the disproportionate assets case gave the Mannargudi mafia idea. "An unfavourable judgment or remark by the court, it was felt, would have put pressure on Jayalalthiaa to resign and hand over the government to somebody she could trust,."

The Tehelaka reporter Jeemon Jacob then went on reveal that it was Gujarat chief minister Narendra Modi who forewarned Jayalalithaa about her inner circle's machinations.

"Specifically, an NRI businessman who came to tamil Nadu with a project had to shift to Gujarat because the Mannargudi mafia had sought a 15 percent cut", says the report.

Modi, the report said, reportedly warned Jayalalithaa to keep a watch on her inner ring. He reportedly told her that big investors were avoiding Tamil Nadu because of the extortionate demands from Sasikala and her family members.

47 பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

பாகிஸ்தான் சர்வதேச விமானம் (Pakistan International Airlines)நாட்டின் வடக்கு பகுதியில் விழந்து நொறுங்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் சர்வதேச விமானம் (கோப்புப்படம்) சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்த பிகே-661 என்ற விமானம் சில மணிநேரத்திற்கு முன்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்துவிட்டது என அந்த விமான சேவை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் மொத்தம் 47 பயணிகள் இ்ருந்தனர். விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியது. அந்த இடத்துக்கு சென்று தேட ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி 100 கோடி கமிஷனுக்கு மாற்றினார் .பாஜகவின் முன்னாள் அமைச்சரின் ..

இந்தியாவில் கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய்களுக்கு தடை விதித்தார். அதனால் ஏழை எளிய பொதுமக்கள் பழைய ரூபாயை மாற்ற வங்கிகளில் நின்று தவித்து வந்தனர். கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் ரெட்டி தனது நண்பர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பீமான் நாயக் மூலம் 20 சதவீத கமிஷனுக்கு 100 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவரது டிரைவர் ரமேஷ் கவுடா தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார். இறக்கும் போது ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்கொலைக்கு ஜனார்த்தனன்ரெட்டி கொடுத்த மனஉளைச்சலே காரணம் என்றும், அவர் 20 சதவீத கமிஷன் கொடுத்து 100 கோடி கருப்பு பணம் மாற்றியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தான் 500 கோடியில் தனது மகளுக்கு மிக பிரம்மாண்டமான திருமணத்தை நடத்தியவர். இவர் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் பதிவு

எடப்பாடியை பின் தள்ளி மீண்டும் முன்னே வந்த பன்னீர்செல்வம் .. வெங்காயம் உதவி ?


‘எல்லோர் மனதிலும் இருக்கும் சந்தேகம்தான்! சரியான நேரத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ்!’ என, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்க்கு கமெண்ட் போட்டிருந்தது வாட்ஸ் அப். அப்படி என்ன ஸ்டேட்டஸ் அது? பார்த்தோம்.
“மறுபடியும் பன்னீர் எப்படி முதல்வர் ஆனார்? என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்திலும், அதிமுக வட்டாரத்திலும் அதிகமாக முணுமுணுக்கப்படுகிறது. அந்த முணுமுணுப்புக்குக் காரணம் சசிகலாவுக்கும் சரி... அவரது சொந்த பந்தங்களுக்கும் சரி... பன்னீரை பிடிக்காமல் போனதுதான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில், இனி அவரை காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

‘ஜெ’-வை உருவாக்கியவர்கள் நாங்கள்: மீண்டும் சீனுக்கு வந்த நடராஜன்!

ஜெயலலிதா மறையும் வரை அமைதியாக இருந்த சசிகலா நடராஜன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பேசத்துவங்கியிருக்கிறார்.
நேற்று இரவு, ‘நியூஸ் 18’ தமிழ்நாடு டிவி சேனலுக்கு சசிகலா நடராஜன் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித்தலைவரின் புகழும் புரட்சித்தலைவி அம்மாவின் புகழும் இருக்கும் வரையில் அதிமுக தொடரும். புரட்சித்தலைவரின் இரட்டை இலையும் புரட்சித்தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும். புரட்சித்தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் என்பதை தேர்வு செய்த மிக முக்கியமான தலைவர்களாக நாங்கள் இருந்தோம். அவர்களில் பலர் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைச் சொன்னால் தாமதமாகும். இந்தக் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய தகுதி வாய்ந்தவர் யார்? என்று தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள் எல்லாம் அப்போது இருந்தோம்.
திருட முடியாது

ஜெ.வை. யார் கண்ணிலும் காட்டாமல் இப்படி அடைத்து அனுப்பி விட்டார்களே.. டிராபிக் ராமசாமி


Traffic Ramasamy questions the death of Jayalalitha சென்னை: தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே. ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே என்று சமூக சேவகரும், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவருமான டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு: தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.
இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே.
ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே. மரணத்தில் கூட கண்ணியத்தைக் காட்டாமல் எப்போது இறந்தார் என்பதில் கூட குளறுபடி செய்யவேண்டிய சுய நல மனிதர்கள் தான் அவரைச் சுற்றிலும் இருந்திருக்கிறார்கள் போலும்.
மொத்தத்தில், ஜெயலலிதா என்னும் " அடிமைப் பெண்", ஐந்துமுறை நாட்டை ஆண்டாலும், இறுதி வரை தனக்கு விருப்பம் இல்லாத வாழ்வைத்தான் பாவம் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.
மரணத்தின் மூலம், விட்டு விடுதலையாகி....! tamiloneindia.com

மாயாவதி : நோட்டு அறிவிப்பால் மக்கள் பிச்சைகாரர்கள் ஆகிவிட்டனர் ! சாதாரண மக்கள் திவாலாகி விட்டனர் .

mayavathi
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பிச்சைகாரர்ர்களாக மாறிவிட்டனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாதில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பேசியபோது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்க்கும் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்தார்.
"எனது அரசியல் எதிரிகளால் என்னை என்ன செய்துவிட முடியும்? நான் ஒரு யாசகன்' என்று அவர் பேசினார். மோடி இன்னமும் யாகசகரராக மாறிவிடவில்லை. ஆனால் நாட்டின் 90 சதவீத மக்களை அவர் யாசகர்களாக்கி விட்டார். அவர் எடுத்த ரூபாய் நோட்டு வாபஸ் முடிவானது சாமானிய மனிதனை திவாலாக்கி விட்டது.

மோடி மீண்டும் (சசிகலா) நடராஜனிடம் கை குலுக்கிவிட்டுச் செல்கிறார்..

டிசம்பர் 24, 1987 இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அவரால் வெற்றி பெறவும் முடிந்தது. இனி ஜானகிதான் தமிழகத்தின் முதல்வர் என்று மக்கள் நம்பத் தொடங்கிய போது அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் இரு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ‘ஜானகி மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவெல்லாம் வர முடியாது..இன்னும் ரெண்டு மூணு வருஷம் இப்படியே ஓடட்டும். அவரை பொம்மையாக வைத்து காங்கிரஸைக் தமிழகத்தில் மீண்டும் துளிர்க்கச் செய்துவிடலாம்’ என்பது ஒரு கருத்து. அடுத்த தேர்தலில் ஜானகியை கூட்டணியில் வைத்துக் கொண்டே தேர்தலைச் சந்திக்கச் சொல்லி அவரை அறிவுறுத்தியிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ஜானகியின் எதிரிகளை வீழ்த்த உதவுவதன் வழியாக ‘எம்.ஜி.ஆர் ஆட்சி தொடர்வதற்கு காங்கிரஸ் உதவியது’ என்ற நல்ல பெயரையும் தமிழக மக்களிடம் சம்பாதிக்கலாம் என்று ஊதுகிறார்கள். காங்கிரஸ் மேலெழும்ப இதுதான் நல்ல வழி என்று சொல்லப்பட்ட இந்தக் கருத்தானது ராஜீவை சற்றே அசைத்துப் பார்க்க தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைத்து விசாரிக்கிறார்.

11.30 மணிக்கு ஜெ. இறக்கப் போவதை 11 மணிக்கே எப்படி அறிந்தார் மோடி... 6 மணிக்கு என்று சு.சாமி ஏன் கூறினார்?

முதல்வர் ஜெயலலிதா 11.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 11 மணிக்கே அவருக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டிவீட் போட்டுள்ளது குழப்பம் தருவதாக உள்ளது.
Modi tweet creates doubt on the timing of Jayalalitha's deathடெல்லி: முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி 11.30 மணிக்கு இறந்தார் என்பது அப்பல்லோவின் அதிகாரப்பூர்வ தகவல். ஆனால் 11 மணிக்கே ஜெயலலிதாவின் மரணத்தால் தான் சோகமடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டிவீட் போட்டிருப்பது குழப்பத்தைத் தருவதாக உள்ளது.
அப்படியானால் அதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டாரா.. அவர் இறந்து விட்டதாக ஊடகங்களில் முன்கூட்டியே வந்த தகவல்கள உண்மைதானா.. பிறகு ஏன் 11.30 மணிக்கு முதல்வர் இறந்தார் என்று அறிவித்தார்கள் என்பது புரியவில்லை.
; "ஜெயலலிதா மேட்டர்" குறித்து 6 மணிக்குத் தெரிய வரும் என்று சுப்ரமணிய சாமி ஒரு ட்வீட் போட்டார். அதைத் தொடர்ந்து அந்த நேரத்தையொட்டி அவர் காலமாகி விட்டதாக தந்தி டிவி (முதலில்) செய்தி ஒளிபரப்பியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அது மறுக்கப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை நடந்து வருவதாக செய்தி பரவியது.

சசிகலா குடும்பம் நடந்து கொண்ட முறை சந்தேகம் கொள்ள வைக்கிறது .. ஜெயலலிதாவின் ஆரோக்கியம் சம்பந்தமாக உரிய விசாரணை தேவை.

மக்களால் நான்... மக்களுக்காகவே நான்!’ - தேர்தல் மேடைகளில் மட்டுமல்ல.. பொது நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா சொல்லும் தாரக மந்திரம் இது. அந்த வார்த்தையை சொன்ன அம்மா இனி இல்லை என தெரிந்தபோது கதறினார்கள் ஓட்டுப் போட்ட மக்களோ மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள். ஓட்டு வாங்கி மக்கள் பிரதிநிதிகளோ இந்த அளவுக்கு கண்ணீர் சிந்தவில்லை. அப்போலோ தொடங்கி எம்.ஜி.ஆர் சமாதி வரையில் ஜெயலலிதாவை சுற்றி வளையம் அமைத்தது மன்னார்குடி. இது மக்கள் ஆட்சியா? மன்னார்குடி ஆட்சியா? என ஜெயலலிதாவின் சமாதி ஈரம் காய்வதற்குள் கதறல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன.
ஜெயலலிதாவை எட்டடி தூரத்தில் நின்று 60 டிகிரி கோணத்தில் உடலை வளைத்து வணக்கம் வைத்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே நின்றபோது பழைய பவ்யம் இல்லை. ஆனால் அவரது உடலை சுற்றி நின்ற சசிகலா உறவுகளிடம் ஏனோ கம்பீரம் தெரிந்தது. ஆட்சிக்கு கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘செயற்குழு உறுப்பினர்’ என்பதால் சசிகலா மட்டும் விதிவிலக்கு. அவரது உறவுகளுக்கு என்ன சம்மந்தம்? ஆனால் அவர்கள் ஜெயலலிதாவின் உடலை சுற்றி நிற்க... அமைச்சர்கள் படிக்கட்டுகளில் கிடந்தார்கள். ஜெயலலிதாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்வதில் அப்படி என்ன அவர்களுக்கு அக்கறை? பீரங்கி வண்டியில் சசிகலாவும் அவர்களின் உறவுகளும் எந்த புரோட்டோக்காலில் அமர வைக்கப்பட்டார்கள்? இறுதி சடங்கில் கவர்னர், மத்திய அமைச்சர், முதல்வர் என்கிற முன் வரிசையில் சசிகலா உறவுகள் முன் நிறுத்தப்பட்டது எந்த அடிப்படையில்? இப்படி கட்சியினர் கேள்விகளை எழுப்பி கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது ஒருவர் கூட அழவில்லை .. முன்பு விக்கி விக்கி அழுதாங்களே?


ஜெயலலிதா உயிரோடு
இருந்து இரண்டு முறை சிறை சென்றபோதிலும் அழுது கண்ணீர் விட்ட அதிமுக பிரமுகர்களிடம், ஜெயலலிதா மரணத்தின்போதும் பன்னீர் பதவியேற்றபோதும் அந்தக் கண்ணீர் மிஸ்ஸிங் என்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற அறிவிப்பை வெளியிட்டது அப்போலோ நிறுவனம் வெளியிட்டது. அதற்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டு சட்டமன்றத் தலைவரை நியமனம் செய்தனர். அதன் பிறகு ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் ஓ.பி.எஸ். முதல்வராக பதவியேற்றார். அவருடன்   ஹாப்பி இன்று முதல்  ஹாப்பின்னு பாடியிருப்பாங்களோ?

பொதுச்செயலாளர் சசி: செப்டம்பர் 20இல் ஒப்புக்கொண்டாரா ‘ஜெ’? பத்திரம் முன்தேதி இடப்பட்டது?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி நாட்களில் இடம்பெற்ற அத்தனை  விடயங்களிலும் ஒரு மர்ம நாவலுக்கு உரிய ரகசியத் தன்மை இருந்தமை கொஞ்சம் யோசிக்க வேண்டிய ,கவனிக்க பட வேண்டிய ஒன்றாகும் . பல சந்தேகங்கள் எதிர்காலத்தில்  நிச்சயம் எழும். ஜெயலலிதா அதை கூறினார் இதை கூறினார் . கையெழுத்து வைத்தார் என்றெல்லாம் இனி கூறுவதை நம்புவது கொஞ்சம் சிரமமான காரியம்தான்.முன்தேதி இட்ட பத்திரம் தயார் செய்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல   
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியே போயஸ் தோட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அன்று போயஸ் தோட்டத்தில் அதிமுக கட்சியின் சட்டங்களில் மிக முக்கியமான எட்டு திருத்தங்களைச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. மேலும், அன்றே அதிமுக-வின் பொதுச்செயலாளர் சசிகலா என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஜெயலலிதாவே தயார் செய்துள்ளதாகவும் நமது ‘மின்னம்பலம்’ இணைய இதழுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் கடந்த 75 நாட்களாக நீங்கா நிழலாக ஜெயலலிதாவின் பக்கம் இருந்தார் சசிகலா. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததை அறிவித்தது அப்பல்லோ நிர்வாகம். டிசம்பர் 6ஆம் தேதி காலை முதல் இறுதி ஊர்வலம் வரை ஒரு கணமும் ஜெயலலிதாவை விட்டு அகலாமல் தலைமாடு காத்தார் சசிகலா.