தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும்
காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச்
சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார்” என மனிதநேய மக்கள்
கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016
அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால் காவல்நிலையத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர்
காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும்போது திருப்புலானி அருகிலுள்ள
பாலத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்ததாகக் கூறி காவல்துறை இக்கொலையை
மறைக்க முயற்சித்துள்ளது.

























