மின்னம்பலம் - Mathi : வாருமய்யா.. ஸ்டாலின்- ப.சிதம்பரம் சந்திப்புல என்ன நடந்துச்சாம்?
ஆமாய்யா… காலையில 10.03 மணிக்கே நாமதான் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திக்கப் போறாருன்னு முதல்ல சொன்னோம்.. அப்புறமா சிதம்பரம் வீட்டுக்கு செல்வப்பெருந்தகை போனது, அங்கே நடந்த டிஸ்கஷன், ஸ்டாலினை சந்திக்க புறப்படுறதுக்கு முன்னாடி சோனியாகிட்ட ப.சிதம்பரம் பேசுனதுன்னு லைவ்வா நியூஸ்ல அப்டேட் செஞ்சோம்.
சிதம்பரம் வர்றதுக்கு முன்னாடியே சபரீசன், கனிமொழியை ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு வர சொன்னார்.. அங்கே மூணு பேரும் சீரியஸ் டிஸ்கஷன் செஞ்சாங்க..
”ராகுல் காந்திகிட்ட கனிமொழி ஏற்கனவே 27+1-ன்னு சொல்லி இருந்தாங்க.. பேச்சுவார்த்தை குழு முதல் கட்டமாக 25+1-ன்னு சொல்லி இருந்தது.. இப்ப காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பாங்க.. அதுக்குதான் ப.சிதம்பரம் வர்றாரு.. நாம என்ன பதில் சொல்றது?”ன்னு விவாதிச்சாங்க..
இந்த டிஸ்கஷன்ல , ஏற்கனவே 27+1-ன்னு சொல்லி இருந்தோம்.. இப்ப 28+1.. இல்லைன்னா 29+1-க்கு கன்சிடர் பண்றோம்னு சொல்வோம்”னு பேசினாங்க..
சரி.. ஸ்டாலின்கிட்ட ப.சிதம்பரம் என்ன சொன்னாரு?
ஆழ்வார்பேட்டை வீட்டுலதான் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திச்சாரு.. செல்வப்பெருந்தகையும் கூடப் போனாரு.. இந்த சந்திப்புல என்ன பேசுனாங்கன்னு விசாரிச்சப்ப, “ப.சிதம்பரத்திடம் ஸ்டாலின் முதல்ல ரொம்பவே வருத்தமா பேசியிருக்காரு.. எலக்ஷன் ஒர்க்ல நாங்க எவ்வளவு சீரியசா போய்கிட்டு இருக்கிறோம்னு உங்களுக்கும் தெரியும்.. பெண்களுக்கு ரூ.5,000 கொடுக்கிறது எவ்வளவு சிரமம்.. அதை நாம கஷ்டப்பட்டு கொடுத்துட்டோம்..
ஆனா, “மகளிர் உரிமைத் தொகையால மட்டும் தேர்தல் வெற்றி உறுதியாகும்னு நம்புறது மூடத்தனம்”னு காங்கிரஸுல ஒருத்தர் எழுதுறாரு..
கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏத்துக்கவே மாட்டாங்க.. ஒத்துவராதுன்னு நான் சொன்னா.. ‘அதை ”மக்கள் முடிவு செய்வாங்க”ன்னு மற்றொருத்தர் சொல்றாரு..
இந்த மாதிரி பேசுறவங்க மேல நீங்க ஆக்சனும் எடுக்கலை.. கண்டிக்கக் கூட இல்லை.. இது எங்களை ரொம்ப வருத்தப்பட வெச்சிருச்சு”ன்னு குமுறலை கொட்டியிருக்கிறார்.
இதுக்கு ஸ்டாலினை கன்வீன்ஸ் செய்யுற மாதிரி, “அவங்க Own Intrest-ல பேசியிருப்பாங்க”ன்னு சாஃப்டா சொன்னாரு ப.சிதம்பரம்..
அப்புறமா, சோனியா காந்திகிட்ட கூட்டணி பிரச்சனையை பத்தி, தான் என்ன பேசுனேன்னு ப.சிதம்பரம், ஸ்டாலின்கிட்ட ஷேர் செஞ்சாரு..
அதாவது, “தமிழ்நாட்டுல கூட்டணி மந்திரி சபைங்கிறது எப்பவுமே சரியா வராது.. அது நல்ல ரிசல்ட்டையும் கொடுத்தது இல்லை.. அப்படியே நமக்கு 2 மினிஸ்டர் போஸ்ட் கொடுத்தாலும் என்ன டிபார்ட்மெண்ட் கொடுப்பாங்க? அதிகபட்சம் ஃபாரெஸ்ட், கதர்த்துறைன்னுதான் கொடுப்பாங்க”ன்னு சொன்னேன்னு சொல்ல ஸ்டாலின் சிரிச்சுட்டார்..
அப்புறமா, “கட்சியை வலுப்படுத்தனும்னா உள்ளாட்சி தேர்தல்ல அதிக இடங்களைக் கேட்டு வாங்கனும்.. அதுதான் சரியா இருக்கும்னு சோனியா காந்தி- கார்கே எல்லார்கிட்டேயும் சொல்லி இருக்கேன்”ன்னும் சிதம்பரம் விவரிச்சாரு..
இதெல்லாம் பேசி முடிச்சப்புறமா எத்தனை தொகுதின்னு நம்பர்ஸ்க்கு வந்தாங்க..
ஸ்டாலின்கிட்ட, ”ஹை கமாண்ட் நீங்க சொல்ற 25 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்கிறாங்க.. இப்ப நடக்குற ராஜ்யசபா எலக்ஷனில 2 சீட் கொடுத்தா நல்லா இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்”ன்னு சிதம்பரம் சொன்னாரு..
அதுக்கு ஸ்டாலின், “2 ராஜ்யசபா சீட்டா? அதுவும் இப்ப எலக்ஷனுக்கா?”ன்னு கேட்டுட்டு, “நம்ம கூட்டணியில தேமுதிக, கமல் கட்சி எல்லாம் புதுசா வந்திருக்காங்க.. ஏற்கனவே இருக்கிற கட்சிகளும் சரி.. நாங்களும் சரி சீட்டை குறைக்கிற நிலைமையிலதான் இருக்கிறோம்.. இப்ப காங்கிரஸ் மட்டும் அதிகமான சீட் கேட்டா மத்த கட்சிகளும் அதே மாதிரி எதிர்பார்ப்பாங்க.. கேட்பாங்க.. அது உங்களுக்கே நல்லா தெரியும்தானே..”ன்னு விளக்கமா சொன்னாரு..
ப.,சிதம்பரம், “நீங்க சொல்றது கரெக்ட்தான்.. இருந்தாலும் நாங்க 140 வருஷ தேசிய கட்சி.. அதனாலாதான் ‘கூடுதலா’ நம்பர்ஸ் கேட்கிறோம்”னு மீண்டும் அழுத்தமாக சொன்னார்.
அப்ப, “இந்த எலக்ஷனுக்கு 2 ராஜ்யசபா சீட்டுங்கிறது முடியாது.. இப்ப 1, 2028-ல் 1 சீட்டுன்னு கன்சிடர் பண்றோம்.. தொகுதிகள் நம்பர்ஸைப் பொறுத்தவரைக்கும் 29 தர்றோம்.. உள்ளாட்சி எலக்ஷன் நேரத்துல அதைப் பத்தி பேசிக்கலாம்”னு ஸ்டாலின் சொன்னாரு.
இதுக்கு அப்புறமா பரஸ்பரம் சில விஷயங்களை பேசிட்டு ப.சிதம்பரம் மகிழ்ச்சியோடு வணக்கம் சொல்லிட்டு கிளம்பிட்டாரு..” என்றனர்.
ஸ்டாலின் சந்திப்பு முடிஞ்ச கையோடு சோனியாவை தொடர்பு கொண்டு, ஸ்டாலின் கிட்ட பேசுனதை எல்லாத்தையும் விலா வாரியா சிதம்பரம் சொல்லிட்டாரு.. அதாவது, “ 25 சீட்னு திமுக சொல்லுச்சு.. நீங்க கூடுதலா சீட் வாங்குங்குன்னு சொன்னீங்க.. இப்ப 29+2-ன்னு சொல்லி இருக்காங்க.. 1 ராஜ்யசபா சீட் அடுத்த எலக்ஷனுக்கு சொல்றாங்க.. உள்ளாட்சி தேர்தல்ல நாம 25% கேட்கிறோம்.. உள்ளாட்சி எலக்ஷன் நடக்கிறப்ப இதை டிஸ்கஷன் செஞ்சுக்கலாம்.. இப்ப அசெம்பிளி எலக்ஷனை பேசி முடிப்போம்.. நாளைக்குள்ள சொல்லுங்கன்னு சொல்றாங்க..” என சொன்னார் சிதம்பரம்.
திமுகவால எத்தனை சீட் தர முடியும்னு தெளிவாக சொல்லிட்டாங்க.. நாளைக்குள்ள டெல்லிதான் முடிவை சொல்லனும்.. அந்த முடிவைதான் எல்லாருமே ரொம்பவே எதிர்பார்க்கிறாங்கய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக