சனி, 31 டிசம்பர், 2022

காங்கேசன்துறை புதுசேரி கப்பல் போக்குவரத்திற்காக குடிவரவு குடியகல்வு துறைமுகமாக காங்கேசன்துறை அறிவிப்பு !

hirunews.lk  :  பயணிகள் கப்பல் சேவைக்காக தயாராகும் காங்கேசன்துறை!
காங்கேசன்துறை துறைமுகத்தை குடிவரவு குடியகல்வு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட அரசு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 23ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு, இந்த அரசு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,
காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: