வெள்ளி, 30 டிசம்பர், 2022

மருத்துவத்துறையில் செவிலியர்களின் துன்பம் .. கண்டு கொள்ளாத அமைச்சர் மா சுப்பிரமணியம்

Loganayaki's :       மா.சு அவர்கள் மருத்துவத்துறையில் கொட்டும் வன்மத்தை பார்த்தால் ... மாடு ஒரு பெரிய விலங்கு.. தமிழனுக்கு சாப்பிட்டால் செமிக்காதுன்னு கதை கட்டுற கேங்க் தான் வருங்கால தமிழக மருத்துவக்குழுவாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன்.
    அவரால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி அரசுத்துறை செவிலியரை பெர்மெணண்ட் செய்ய இயலாது.
    அரசு மருத்துவர்கள் field லயும் இருக்கனும் ..field க்கு சம்மந்தமில்லாத தூரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்தில் attendance ல கையெழுத்தும் போட்ருக்கனும்.
    துணை சுகாதார மைய செவிலியர்கள் சுகாதார நிலையத்துல போய் biometric தினமும் காலை மாலை இருவேளை பதிவு செய்யனும்.என் துணை சுகாதார மையத்துல இருந்து சுகாதார மையம் 25 நிமிடம் ட்ராவல்.பேருந்து அடிக்கடி இல்லை.திரும்ப என் லொக்கேசனுக்கு போய் வேலை துவங்க 12 ஆகும்.அடுத்து 4 மணிக்கு திரும்ப சுகாதார நிலையம் தேடி பஞ்ச் பண்ணனும்.அதுக்கு 3 மணிக்காவது பஸ் இருக்கனும்.இந்த துயரக்கதைய dept ல சொல்லி 2 நாள் போதும் என்றனர்.(பெரும்பாலும் ஒவ்வொரு சுகாதாரமையமும் தூரமாகத்தான் இப்படித்தான் இருக்கும்)
    இப்போது எல்லா நாளும்னு அடுத்து ஒரு அறிக்கை வந்திருக்கிறது.field difficulties கேட்காம கொண்டு வரப்படும் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் நிலைபெறாது.ஒழுங்கீனமே இது போல் ஒப்பேறாத திட்டங்களில் அறமாகும்.
    இவங்க சொல்றது போல் எல்லா நாளும் phc போய் பஞ்ச் செய்தால் என்ன ஆகும்?அந்த ஒரு வேலை தான் நடக்கும்.நாங்க என்ன மனிதர்களா?..இல்லனா பறவைகளா?னு கூட யோசிக்க முடியவில்லையா?
    கட்டமைப்பு ,Emergency equipment இல்லாததால் நிகழும் மரணத்துக்கு மருத்துவர் செவிலியர் இடமாற்றம் செய்தால் எப்படி அடுத்து இறப்பு நடக்காமல் இருக்கும் என்பது அதை விட பெரிய -??.சமீபத்தில் விருது நகர் பகுதியில் இது போல் சம்பவம் நடந்தது.
 
Muthu Velu  :      மற்ற துறைகளுக்கு எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக போர்டல் சமாளித்து விடலாம் ஆனால் தயவுசெய்து மருத்துவத்துறைக்கு மட்டுமே நல்ல முறையில் மருத்துவர்களை துறை அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தர வேண்டும் தி மு க வில் பல்வேறு வகையான மருத்துவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் ஆகவே முதலில் என்ன விஷயம் என்று ஓரளவுக்கு புரிந்து கொள்ள கூடிய நபர்களை அமைச்சராக போட குரல் கொடுப்போம்
    ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தான் முதலில் சுகாதார துறை அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று தகவல் ஆனால் இடையில் தனது மாவட்டத்தில் உள்ள நபர்கள் அமைச்சராவதை மாசு விரும்பவில்லை அது மட்டுமல்ல தானே ஓர் அறிவுஜீவி என்று அந்த துறையில் அவரது எண்ணம் இதுவே இப்போது பலருக்கு சிக்கல் ஆகிறது

 Muthukrishnamurthy Muthu :      சேகர் பாபு மா சுப்பிரமணியன் இருவரும் தாய் மொழி தெலுங்கு இருவரும் திமுக கொள்கையை நேர் எதிரான கொள்கை கொண்ட நபர்கள் இருவரும் ஊடகங்களில் செய்திகளில் பேசும் பொருட்கள் இருவரும்

Narasimman Maheswaran :  இவர் ஒரு பெரும்பான்மை அரசு ஊழியர் நிறைந்த குடும்பத்தை சார்ந்தவர் மேடம்... நமது குறைகள் அவருக்கு தெரியட்டும்

கருத்துகள் இல்லை: