திங்கள், 11 ஜூலை, 2022

ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசி மோதல் -ரத்தகளறியான ராயப்பேட்டை. ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீச்சு

Jeyalakshmi C  -  e Oneindia Tamil :  சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுமா நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கற்களை வீசியும் கம்புகளை வீசியும் தாக்கி வருகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
சென்னை மனப்பாக்கத்தில் நீச்சல் குளம் பார்த்த 2 BHK வீடு @ 94 லட்சத்தில்* அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி வந்த ஓ. பன்னீர் செல்வம் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டது.
காவல்துறையினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.
ராயப்பேட்டையே ரத்தகளறியாக காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அவரை அலுவலகத்திற்கு உள்ளே விட மறுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தகராறு செய்வதால் பதற்றம் உருவாகியுள்ளது வன்முறை களமாக மாறியுள்ளது
அவ்வை சண்முகம் சாலை. பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை உதைத்து திறந்து உள்ளே நுழைந்துள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்

கருத்துகள் இல்லை: