ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

மோடிக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து... பாஜகவுக்கு .. ? காங்கிரஸ்காரர்கள் ஷாக்!

வருமான வரிவழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு- Dinamani

Giridharan N | Samayam Tamil : இந்தியாவில் இருக்கும் பிரதமரும், ,மத்திய அமைச்சர்களும் அடிக்கடி வெளிநாடு சென்றால்தான் உலகப் பார்வை வரும். அந்த வகையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறி அனைவரையும் வியப்படைய செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை பற்றி கூறும் கசப்பான உண்மைகளையும் பிரதமர் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும்வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது என்றும் உறுதிபடக் கூறினார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தவர், முதல்வர் நேரடியாக தலையிட்டு, காவல் துறையின் மூலம் இரும்புக்கரம் கொண்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காட்டுத்தனமாக மோதிக்கொண்ட காங்கிரஸார்!
டெல்லி நீதிமன்ற வளாக துப்பாக்கிச் சூடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், 'உள்துறை அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது என்றும், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தை பாஜகவும், மத்திய அரசும் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: