செவ்வாய், 5 ஜனவரி, 2021

இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி;விரைவில் யார் யாருக்கு என்ற பட்டியல்

  daylitythanthi :    டெல்லி கொரோனாவால் உலகமே பாதிக்கபட்டு உள்ள நிலையில் . மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் உலகின் பல நாடுகளிலும் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை 29 நாடுகள் தொடங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் தொடங்கியுள்ளது; மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவில் சில நாடுகள்; மற்றும் ரஷியா ஆகியவை தொடங்கி உள்ளன. இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு  தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னர் தடுப்பூசி செயல்முறை தொடங்கி உள்ளது. 2021ஆம் ஆண்டின் மத்திக்குள், இந்தியா 30கோடி  பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 

இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடிந்த அளவிற்கு நாடுமுழுவதும் எவ்வளவு பேருக்கு செலுத்தமுடியுமோ அதை செலுத்திமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 

அதன்படி நாடுமுழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகளை எப்படி கொண்டுசெல்வது, யார் யாரெல்லாம் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியல்களையும் மத்திய அரசு தயாரித்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, மருத்துவத் துறை மற்றும் காவல்துறை, ராணுவத் துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

அதேபோல், கோவின் செயலிமூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்தவர்களுக்கும் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கவேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மாநில வாரியான விவரப் பட்டியல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு தயார் என  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறி உள்ளார். அவர் மேலும் கூறும் போது 

அவசரகால பயன்பாட்டு அங்கீகார ஒப்புதல்களின் 10 நாட்களுக்குள் தடுப்பூசி தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இறுதிமுடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும். சேமிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட வசதி டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிறது. நாட்டில்  10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வசதி எங்களிடம் உள்ளது. 

கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில்  4 முதன்மை தடுப்பூசி  சேமிப்பு மையங்கள் உள்ளன, மேலும் நாட்டில் 37 தடுப்பூசி சேமிப்பு மையங்கள்  உள்ளன. அவர்கள் தடுப்பூசிகளை மொத்தமாக சேமித்து விநியோகிக்கிறார்கள் என கூறினார்.

கருத்துகள் இல்லை: