வியாழன், 24 டிசம்பர், 2020

திமுகவின் கிராம சபை கூட்டங்களுக்கு தடை ! தமிழக அரசு அறிவிப்பு

malaimalar : கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் .     கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.     சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது .    அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு .    கிராமசபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன.      சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.     ஊரகப் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் காண வழி வகுக்கிறது கிராமசபை என தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: