ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கனிமொழி பிறந்தநாள் . ...சமூகநீதியும் சுயமரியாதையும்.. வசப்பட்ட தமிழுமாய் வாழும் வீராங்கனை

Devi Somasundaram : இந்தியாவின் தனிப் பெரும் தலைவர் கலைஞரின் மகள்
என்ற அடையாளத்தால் பெற்ற லாபத்தை விட வசவுகளே அதிகம்.2010 - 2015 வரையிலான கால கட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டஙகளில் அந்த நிலத்தை லாம் கனிமொழி வாங்கிடுச்சாம்னு எந்த நிலத்தை வேணா கைக் காட்டி பேசுவதை நிறைய கேட்டு இருக்கின்றேன் .அந்த பிரியட்ல எந்த லேண்ட் கைமாறினாலும் அது கனிமொழி தான்னு அடிச்சு சத்தியம் செய்வாங்க..
.உனக்கு எப்டி தெரியும்..டாக்குமெண்ட் காட்டுன்னு கேட்டா " உனக்கு ஒன்நும் தெரியாது, வெளில நடக்கறதுலாம் என்னன்னு எனக்கு தெரியாதா" அடுத்த புருடாவ விடுவாங்க
. அந்த நிலத்தோட உரிமையாளர் யார்னே தெரியாம அது 100 வருடமா எந்த டிரான்ஷாக்‌ஷனும் இல்லாம இருக்கறது பத்திலாம் எந்த ஐடியாவும் இல்லாம பேசுவாஙக ..அந்த நிலம்லாம் இன்னிக்கும் திமுகவுக்கோ, அரசியல்வாதிக்கோ சம்பந்தமில்லாத சாதாரண மக்கள் கைல உரிமையாளர் கைல தான் இருக்கும்..அதுல விவசாயம் செய்வார்,வீடு கட்டுவார்,அன்னிக்கு வித்திச்சாச்சுன்னு சொன்னமே..இப்ப அது பொய்யாகிடுச்சேன்னு கொஞ்சம்கூடவெக்கமே இல்லாம கடந்து போவார்கள் ..
இதை படித்த,படிக்காத ,ஏழை, பணக்காரனு எல்லா வர்க்க ஆட்களும் கூசாம பேசினார்கள்.

குழாயடில ஆரம்பித்து கார்ப்ரேட் மீட் ல கூட இந்த பொய்களை வெக்கமே இல்லாம பேசினார்கள் .
இன்று வரை ஒரே ஆதாரம், நிருபணம் ,கேஸ் என்று எதுவும் இல்லை ..ஆனாலும் இந்த பொய்கள் மட்டும் தொடருது .
ஈழ மக்களுகாக உண்மையான அக்கறையோட செயல்பட்ட தலைவர்களில் கனியும் ஒருவர்னு களப் போராளிகளுக்கு தெரியும் .
கீ பேட் போராளிகளுக்கு கனிமொழிய திட்டுவதற்காக மட்டும் வரும் திடிர் ஈழப் பாசம்லாம் நாம நிறைய பார்த்தாச்சு .
ஒரு பெண்ணாக உடல் ரீதியான கஷ்ட்டங்கள், ஒரு தாயா எதிர் கொள்ளும் சவால்கள், ஒரு மனைவியா செய்ய வேண்டிய கடமைகள், ஒரு சமூக செயல்பாட்டாளாரா பொறுப்புகள் நடுவில் தன் மீது வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் அந்த சமூக நலனுகாகவே போராட எத்தனை அசாத்திய பொறுமையும், அன்பும் வேண்டும்..
ஒரு வாதத்துக்கு வச்சுப்போம்..
உண்மையிலயே அத்தனை காசும் பணமும் இருந்தா நமக்கென்னன்னு வெளினாட்ல ஹாயா வாழப் போய் இருக்க முடியும்..அப்படி செய்திருந்தால் யார் கேட்க முடியும்..
ஏன் இங்க தெருவிலயும் ,பார்லிமெண்ட்லயும் போராடனும்.. சொகுசா வாழ்ந்திட்டு போய் இருக்க நினைச்சா அதான செய்திருக்கனும்..
அறிவரக்கன், பேராசன்.கலைஞரின் காதலில் விளைந்த மலர் கனிமொழி . கலைஞரோட டி என் ஏ வ கொஞ்சம் அதிகமா எடுத்துக் எடுத்துக் கொண்டதாலயோ என்னவோ வசப்படும் தமிழும், சமூக அக்கறையும், அது சார்ந்த சமர்சமற்ற செயல்பாடும் நான் ரசிக்கும் தலைமை தோழர் கனிமொழி .
தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் ஒதுக்கி தலைவர் கலைஞர் வழியில் என்றும் செயல்பட வாழ்த்துகள் தோழர் .
ஹேப்பி பர்த் டே கனி.  தேவி.

கருத்துகள் இல்லை: